கோவை, டிச.27- கோவையில், அனைத்து மேம்பா லங்களிலும் 31 ஆம் தேதி இரவு புத்தாண்டு தினத்தன்று போக்குவ ரத்து தடை செய்யப்பட்டுள்ளதென கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி கோவை மாநகர காவல் ஆணை யர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போக்குவரத்து விதி மீறல் களை தடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல் துறை யினர் இணைந்து நகரம் முழுவ தும் வாகனத் தணிக்கையில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபவர்கள், குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டு பவர்கள், வாகனப் பந்தயத்தில் (Racing) ஈடுபடுபவர்கள், இரு சக்கர வாகனங்களில் சைலன்சர் களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துட னும், ஒலிப்பான்களை ஒலிக்கச் செய்துகொண்டும் வாகனம் ஓட்டு பவர்கள், பொது மக்கள் நடமாட்டத் திற்கும், வாகனப் போக்குவரத்திற் கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜாக்கிரதை யாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள் ளப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காகவும் 45 முக்கியமான சாலை சந்திப்புகள் மற்றும் இடங் கள் கண்டறியப்பட்டு அங்கு காவல் குழுக்கள் மூலம் வாகன தணிக்கை செய்யப்பட உள்ளன. அனைத்து மேம்பாலங்களிலும் 31 தேதி இரவு புத்தாண்டு தினத்தன்று போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்து உள்ளிட்ட அசம் பாவித சம்பவங்களில் பாதிக்கப் பட்டோரை மீட்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. கேளிக்கை விருந்துக ளுக்கு ஏற்பாடு செய்யும் ஹோட் டல்கள் மற்றும் விடுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக காவல் துறையினரின் எண்ணிக்கை பலப்படுத்தப்பட்டு உள்ளது என் றார்.