நாமக்கல், நவ.7- செக்காரப்பட்டி பேருந்து நிறுத் தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என உத்தரவு பிறக் கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள செக்காரப் பட்டி பேருந்து நிறுத்தத்தில், முறை யாக பேருந்துகள் நின்று செல் லாததால் பள்ளி, கல்லூரி மாண வர்கள், அன்றாட வேலைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பி னர் அவதியடைந்து வந்தனர். இந் நிலையில், அனைத்து பேருந்துக ளும் முறையாக நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, சனியன்று உண் ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் அறிவித்தனர். இதுகுறித்து தகவ லறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட் டத்தில், பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து ஆய்வாள ருக்கும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் ராசிபுரம் திருச்செங் கோடு உள்ளிட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து வியாழனன்று திருச்செங்கோடு வட் டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆய்வாளர் சரவணன் தலைமை யில், ஊர் பொதுமக்கள் முன்னிலை யில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. அப்போது அனைத்து பேருந்துகளும் செக்காரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல் லும் என சம்பந்தப்பட்ட அரசு மற் றும் தனியார் பேருந்து நிறுவனங்க ளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக் கப்பட்டது. அதனையேற்று மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி, குப்பிச் சிபாளையம் ஊராட்சி மன்றத் தலை வர் ராஜ், சிபிஎம் எலச்சிபாளையம் ஒன்றியக் கவுன்சிலர் சு.சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், உடன டியாக நடவடிக்கை எடுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அர சுக்கும், போக்குவரத்து நிர்வாகத்திற் கும் பொதுமக்கள் நன்றி தெரிவித் தனர்.