திருப்பூர், ஜூலை 8- திருப்பூர் மாவட்டத்தில் இயங் கும் பனியன் தொழிற்சாலைகளில் வேலை நேரம், இஎஸ்ஐ, பிஎப் உள் ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து பனியன் தொழிற் சங்கங்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து திங்களன்று மனு அளித்தனர். அனைத்து தொழிற்சங்கங்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிற்சாலைகளில் 5 லட் சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான தொழிற்சாலை களில் சட்டப்படியான வேலை நேரம், வார விடுமுறை உள்ளிட்ட தொழிற் சாலை சட்டங்கள் முறையாக அமல்ப டுத்துவதில்லை. மேலும், இஎஸ்ஐ, பிஎப் போன்ற தொழிலாளர் நலச்சட் டங்களும் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. சட்டப்படி வேலை நேரம், தொழிற்சாலைகளில் ஓவர் டைம் வேலை செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இதுவும் வழங்கு வதில்லை. எனவே இரட்டிப்பு சம்ப ளம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் பீஸ் ரேட் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து பிரிவு தொழிலாளர்களை யும் இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் புதிதாக கட்டப்பட் டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனை திறக் கப்பட்டுள்ள போதிலும் துறைவாரி யாக மருத்துவர்கள் நியமனம் செய் யப்படாமல் உள்ளது. எனவே மருத்து வமனைக்கு தேவையான மருத்து வர்கள், மருத்துவத்துறை ஊழி யர்கள் உடனடியாக நியமனம் செய் வதுடன், மருத்துவமனைக்கு தேவை யான நவீன உபகரணங்கள் வழங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்க ளின் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தொழிலா ளர் துறை அதிகாரிகள் தொழிற்சா லைகளில் ஆய்வு செய்து தொழிலா ளர் நல சட்டங்களை அமலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் குறித்து தொழிலாளர் களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண திருப்பூர் மாவட்டத்தில் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும். தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களை முழு மையாக அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட னர். இந்நிகழ்வில், சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம் பத், ஏஐடியுசி பனியன் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர், செல்வராஜ், எல்பிஎப் பனியன் சங்க பொதுச் செயலாளர் க.ராமகிருஷ்ணன், பூபதி, ஐஎன்டியுசி செயலாளர் அ. சிவசாமி, தலைவர் அ.பெருமாள், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் சார்பில் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், இந்த பிரச்சனை தொடர்பாக தொழிலாளர் துறை அலு வலர்களைக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்தார்.