திருப்பூர், ஜன. 24 - தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் மற்றும் ஓய்வூதி யம் வழங்க வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் செவ்வாயன்று திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதி களில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், ஒரு வருடத்திற்கு 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும், தொழிலாளர்களுக்கு மாத ஊதி யம் ரூபாய் 21 ஆயிரத்துக்கு குறையா மல் வழங்க வேண்டும், உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரூபாய் 6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும், நலவா ரிய பலன்களை முழுமையாக முறை சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. குமரன் சிலை முன்பிருந்து ஊர்வ லமாக புறப்பட்டு தலைமை தபால் நிலை யம் முன்பாக ஏஐடியுசி சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே. சுப்பராயன் தலைமையில் தாரா புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இத னால் அமராவதி ரவுண்டானா சாலை யில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில், தலைவர் பி.ரகுபதி, தாலுகா செயலாளர் லட்சுமணன். தாலுகா துணை செயலாளர் ரவி, ஒன்றிய செய லாளர் மலையாண்டி உட்பட மறியலில் ஈடுபட்ட 1200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அழகு நாச்சி யம்மன் மண்டபத்தில் சிறை வைத்த னர்.
உடுமலை:
உடுமலை மத்திய பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநில பொதுக்குழு உறுப்பினர் செளந்திரரா ஜன் தலைமை வகித்தார். இதில்,ஏஐடி யுசி நிர்வாகிகள் இசாக், சுப்பிரமணியம், ரணதேவ், கிருஷ்ணசாமி மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.