கோவை, அக்.1- இந்திய விமான படையின் பராம ரிப்பு பிரிவின் ஏர் கமாண்டிங் அதிகாரி ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டே சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள பராம ரிப்பு பிரிவுகளில் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், சூலூரில் இந்திய படை பிரிவின் விமானப்படைத் தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவின் ஏர் கமாண்டின் பிரிவு அதிகாரி ஏர் மார்ஷல் விபாஸ் பாண்டே ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, ஏர் மார்சலுக்கு விமா னப்படை பிரிவினர் அணி வகுப்பு மரி யாதை செலுத்தினர். பின்னர் விமானப் படைக்கு தேவையான உதிரி பாகங்கள், உபகரணங்கள் மற்றும் அதற்கான பணிகள் குறித்து விமானப்படை அதி காரிகள், பராமரிப்பு பிரிவு அதிகாரி களிடம் கேட்டறிந்தார்.