districts

img

நீதிமன்ற வளாகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

தாராபுரம், டிச. 1- தாராபுரம் நீதிமன்ற வளாகத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தாராபுரத்தில் மாநில சட்டப்பணி ஆணைக் குழுவின் உத்த ரவின்படி தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தாராபு ரம் அரசு மருத்துவமனை இணைந்து எய்ட்ஸ் நோய் பற்றிய   விழிப்புணர்வு முகாமை நீதிமன்ற வளாகத்தில் நடத்தினர். தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் சார்பு  நீதிபதியுமான தர்ம பிரபு, குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு  மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதானி வணங் காமுடி ஆகியோர் முன்னிலையில் 20 ஆட்டோக்களில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டி பிரச்சாரம் செய்த னர். இதைதொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக் களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை  வழங்கி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை எடுத்துரைத்தனர்.