மோடியா! லேடியா! என அன்று செல்வி ஜெயலலிதா சவால் விட்டது, இன்று அடிமை தலைவர்க ளுக்கு தெரியவில்லை என்றாலும், அதி முக தொண்டர்கள் உணர்ந்தே இருப்ப தாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக தொண் டர்கள் பாஜகவினரை கண்டு கொள்ளவே இல்லை என்றாலும், அதனை மீறி ஓரிரு வர் பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களிட மும், பாஸ் மோடி படம், கொடி எல்லாம் வேண்டாம் பாஸ், எங்களோடு சும்மா வந்தா போதும் என வெளிப்படையாகவே பேசுவது, பாஜகவினரை நொந்து கொள் ளச்செய்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் மறைந்தார். இதனைய டுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இம்மாத இறுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். பல் வேறு குழப்பத்தின் உச்சத்தின் இறுதி யில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் தென்னரசு போட்டியிடுவது உறுதியாகி, அரக்கபரக்க கடைசி நாள், கடைசி நேரம் மனு தாக்கல் செய்து, அதிமுகவினர் பிரச் சாரத்தில் இறங்கியுள்ளனர். இதுதவிர நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சி கள் நாங்களும் இருக்கிறோமல்ல என் பதை தெரிவிக்கத்தான் போட்டியிடுவ தாக தெரிகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என் பதாலும், திமுக, சிபிஎம், சிபிஐ, மதி முக, கொமதேக, விசிக உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரும் படையின் ஆதரவுடன் களம் இறங்கியுள் ளது. இதுபோக மக்கள் நீதி மையமும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரி வித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால், திமுக கூட்டணியினர் உற் சாகமாக வாக்குகளை சேகரித்து வரு கின்றனர். மேலும், ஈரோடு கிழக்கு தொகு தியை பொருத்தவரை சுமார் 95 சதவிகி தம் மாநகராட்சி வார்டுகள் திமுக வசம் இருப்பதால், வாக்காளர்களை கண்டறி வது, அவர்களை சந்தித்து வாக்குகளை கேட்பது, என அசுர பலத்துடன் செயல் பட்டு வருகிறது. எதிர் தரப்பில், அதிமுக சார்பில் தென் னரசு பொதுமக்களை சந்தித்து வாக்கு களை சேகரித்து வருகிறார்.
அதிமுக கூட் டணியை பொறுத்த வரை அதிமுகவை தவிர கூட்டணியில் அங்கம் வகிக்கும், பிற கட்சிகளுக்கு மக்களிடம் பெரிதாக செல் வாக்கு ஏதும் இல்லை. மேலும், அதிமுக வில் உள்ள உட்சகட்ட குழப்பம் தொண் டர்களை திசையற்று தவிக்கவிட்டுள் ளது. இரட்டை இலை போட்டியிடுகிறது என்கிற ஆறுதல் மட்டுமே அவர்களுக்கு உள்ளது. இரட்டை இலைக்கு பாதகமாக நாங்கள் இருக்க மாட்டோம் என்று சூளு ரைத்து வேட்பாளரை திரும்ப பெற்ற ஓபிஎஸ் அணியினர், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் டாட்டா காட்டிவிட்டு மூட்டை முடிச்சுகளோடு பஸ் ஏறி சென் றுவிட்டனர். இந்நிலையில், தனித்து விடப் பட்டதைப் போல அதிமுகவினர் தற் போது வாக்குகளை சேகரித்து வருவது தான் பரிதாபம். நல்லதோ, கெட்டதோ தமி ழக மக்களின் பெரும் ஆதரவோடு வலம் வந்த அதிமுக, பாஜக என்கிற ஆக்டோ பஸ் கைகளில் சிக்கி சின்னா பின்னமாயி ருக்கிறது என்பது அரசியல் நோக்கர்கள் மட்டுமல்ல அதிமுகவின் உண்மைத் தொண்டர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இந்நிலையில்தான், ஈரோடு கிழக்கு தேர் தலில் கட்டாயம் வெற்றி பெற முடியாது, ஆனால் தங்களுடைய வாக்கு வங்கியை ஓரளவுக்கேனும் நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளதால், வாக்கு சேகரிப்பில் பாஜகவினர் கூடவே வந்தால், இருந்த தும் போகும் நிலை உருவாகும் என்கிற அச்சத்தோடு அதிமுகவினர் இருப்பது தெரியவருகிறது.
இதுகுறித்து, ஈரோடு கிழக்கு தொகு திக்குட்பட்ட அதிமுக, பாஜகவினரிடம் நட்பாக பேசியபோது, அதிமுக கூட்டணி யில், பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகித் தாலும், பெரிதாக அப்படி ஒரு தோற் றம் இருப்பது போல் தெரியாத சூழலே உள்ளது. அதிமுகவினர் எங்களை பிரச் சாரத்திற்கு அழைத்துச் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாஜக கொடி மற்றும் கட்சித் துண்டை பயன்படுத்தக் கூடாது என்கின்றனர். இது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் வருத்தத்தை ஏற் படுத்துகிறது. தொடர்ச்சியாக நாங்க ளாகவே தான் அதிமுகவினர் ஓட்டு கேட்க செல்லும் போதெல்லாம் கூடவே செல் கிறோம். முறையான அறிவிப்பும், அழைப் பும் வருவதில்லை. தேசிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்தாலும் தேர் தல் பிரச்சாரத்திற்கு கூட பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஆட்களை அழைத்துச் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. ஏன் முறையான அழைப்பு வருவ தில்லை என நாங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் கேட் டால், எங்களுக்கே முறையான அழைப்பு வருவதில்லை. அதனால்தான் உங்களிட மும் ஏதும் கூறுவதில்லை. என கூறு கின்றனர்.
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் எங்கே எங்களை அழைத்துச் சென்றால் இரட்டை இலைக்கு விழும் ஓட்டுகளும் விழாமல் போய்விடுமா என அச்சத்தில், பாஸ் மோடி படம், கொடி எல்லாம் வேண்டாம் பாஸ், எங்களோடு சும்மா வந்தா போதும் என்கின்றனர். அழைப்பு எதுவும் கொடுக்காமல் அவர் களாகவே சென்று வாக்குகள் கேட்டு வரு கிறார்கள். இதில் கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக, பாரதிய ஜனதா கட்சி யில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் பலர் திமுகவில் இணைந்து விட்டனர். இத னால் வெறுப்புற்று, வேறு வழியின்றி, கட மைக்கு ஏனோ தானோ என்று நாங்களும் தேர்தல் பணியாற்ற வேண்டிய கட்டாயத் தில் இருப்பதாக தெரிவித்தனர். அதிமுகவினர் கூறுகையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்க செல்லும் பொழுது பாரதிய ஜனதா கட்சி கொடி பயன்படுத்தப்படுவதில்லை என்பது உண்மைதான். தமிழ்நாட்டின் மனநிலை அப்படி இருக்கிறது. ஆகவே தவிர்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த தேர்தல் எங்களுக்கு வாழ்வா சாவா போராட்டம். எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும், என்றனர். மத்தியிலும் ஆளுங்கட்சியாகவும், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுவதாக மார்தட்டி கூறும் அண் ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சி யினரை ஓட்டுக்களுக்கு வேட்டுவைத்து விடுவார்கள் என அஞ்சி அவர்களை அதி முக தொண்டர்கள் தவிர்ப்பது வெளிப் படையாக ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் தெரிகிறது. தொண்டர்க ளுக்கு தெரிந்தது, இபிஎஸ், ஓபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அரசி யல் வட்டாரத்தின் தற்போதைய பேசு பொருளாக உள்ளது.
-பிரபாகரன், பள்ளிபாளையம்