அவிநாசி, ஜூலை 24- அவிநாசி, ஒட்டர்பாளையம் பகுதி யில் பால் சொசைட்டி கட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதி பெறா மல், தனது அரசியல் லாபத்திற்காக திறப்பு விழா நடத்தி நாடகத்தை அரங் கேற்றிய அதிமுக ஊராட்சி மன்ற தலை வரின் செயல் முகச்சுழிப்பை ஏற்படுத்தி யுள்ளது. அவிநாசி ஒன்றியம், புஞ்சை தாமரை குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டார் பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாடு, எருமை, போன்ற கறவைகளின் பால்களை ஒட்டர்பாளையம் பகுதி கூட் டுறவு சொசைட்டியில் ஊற்றி வருகின்ற னர். இப்பகுதியில் அமைந்துள்ள கூட்டு றவு பால் சொசைட்டி கட்டடம் பழுத டைந்துள்ளது. இதனை சீரமைக்க அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்காலிகமாக பால் சொசைட்டி மேல்நிலைத் தொட்டி யின் குறுகிய இடத்திற்கு மாற்றம் செய் யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2018 -19 ஆகிய வருடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடப்பணிகளும் நடைபெற்ற கொண் டிருந்தது. இப்பணிகள் திடீரென்று நிறுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தி டம் தொடர்ச்சியாக, விவசாயிகள் கட்ட டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இருப்பி னும் பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து தருமாறு அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஜனவரி மாதத்தில் தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டு, பணிகள் நடை பெற்று, நிறைவு பெற்றது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகத் தின் ஒப்புதல் பெறாமல், தன்னுடைய அரசியல் லாபத்திற்காக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், சரவணகுமார் தன்னிச் சியாக இந்த பால் சொசைட்டி கட்ட டத்தை வியாழனன்று திறப்பு விழா செய் தார். இது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன் றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜயகுமாரிடம் கேட்ட போது, எங்களுக்கு இந்த தகவல் தெரிய வில்லை, திறப்பு விழா நடைபெற்று இருந்தால் அது தவறு. ஞாயிற்றுக் கிழமை அன்றுதான் திறப்பு விழா நடை பெறுவதாக இருந்தது. இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்துவதாக தெரி வித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பால் சொசைட்டி யால் பலனடையும் விவசாயிகளோ, சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர் கள் எவரும் இல்லாமல், துறை சார்ந்த அதிகாரிகளும் இல்லாமல், குறிப்பாக ஆணையாளருக்கே தெரியாமல் கட்ட டத்தை திறந்து உள்ளார். இவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.