districts

img

பொதுமக்களுக்கு தட்டு வழங்கும் அதிமுகவினர்

கடந்த பிப்.24 ஆம் தேதி தமிழக முன் னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெய லலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கட்சி கொடி யேற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தினர். இந்நிலையில், ஜெயலலிதா வின் பிறந்தநாளை ஒட்டி கோலப்போட்டி நடத்துவதாக கூறி, அனைத்து வீடுகள் முன்பும் கோலங்கள் இட வேண்டும் என  அதிமுகவினர் அறிவுறுத்தினர். ஒரு நக ராட்சிக்குட்பட்ட ஒரு வார்டு பகுதியில்  சுமார் 50 முதல் 100க்கும் மேற்பட்ட வீடு களில் பலவகையான கோலங்களை பொதுமக்கள் இட்டனர். இதற்கு பிரதி பலனாக கோலமிட்ட ஒவ்வொரு குடும்பத் தாருக்கும் ஒரு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கோலமிட்ட பொதுமக்க ளுக்கு அவசர அவசரமாக இலவச தட்டு களை அதிமுகவினர் ரகசியமாக விநியோ கம் செய்து வருகின்றனர். தேர்தல் அறிவிக் கப்பட உள்ளதை மனதில் வைத்து அதிமுக வினர் இதுபோன்ற ஏற்பாட்டினை செய்து பொதுமக்களை கவர வேண்டும், வாக்கு களை பெற வேண்டுமென இலவச தட்டு களை பொதுமக்களுக்கு அதிமுகவினர் விநியோகித்து வருகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.