தருமபுரி, பிப்.17- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும், அக்கட்சிக ளுக்கு தோல்விதான் கிடைக்கும் என தருமபுரியில் ஐ.லியோனி தெரிவித் தார். தருமபுரி நகராட்சியில் போட்டி யிடும் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து குமார சாமிப்பேட்டை வாரியார் திடலில் தேர் தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேடைப் பேச்சாளர் ஐ.லியோனி பங்கேற்று பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு, அவரது திட்டங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர் களும் உற்று நோக்குகின்றனர். உங் கள் தொகுதியில் முதல்வர் என தனித் துறையை உருவாக்கி பொதுமக்கள் அளித்த லட்சக்கணக்கான மனுக்க ளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. பெண்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடங்களை வழங்கி, மகளிருக்கு அரசியல் உரி மையை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நகர்ப்புற உள்ளாட்சித் தேர் தலில் அதிமுகவும், பாஜகவும் கூட் டணி அமைத்து போட்டியிட்டாலும், அவர்களுக்கு தோல்விதான் கிடைக் கும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங் கம் பி.சுப்ரமணி, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் ரா.தாமரைச் செல்வன், எம்.ஜி.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட செயலாளர் த. ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.