districts

img

பாம்பின் நிழல் பாஜக; கரடியை கட்டியணைக்கும் அதிமுக

மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

கோவை, ஜூன் 14- மக்களை வாட்டி வதைத்து, வாயில் நுரை தள்ளுவதற்கான வேலையை செய்து வரும் பாஜக, விஷ மருந்து போன்றது, அதிமுக கரடியை கட்டியணைத்துள்ளது என மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் ராமலிங்கம் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற் றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,  அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கோவை,  ரத்தினபுரி பகுதியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு நகரச் செயலாளர் சுந்த ரம் வரவேற்றார். இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் பேசுகை யில், ஒன்றிய பாஜக அரசு, சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறை ஆகியவற்றை தங்களு டைய சொந்த பிரச்சனைகளுக்கு பயன்ப டுத்தி வருகிறது. அவற்றின் மூலம் மாநில கட்சி களையும், அமைச்சர்களையும் மிரட்டி வரு வது ஜனநாயகமற்ற நடவடிக்கையாகும். தமி ழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையில் முன்னறிவிப்பின்றி நேரடியாக நுழைந்து ஆய்வுகளை மேற்கொள்வது முறை யற்ற அரசியல் விரோத போக்கு, என்றார்.  வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், தமிழ்நாட்டில் ஆருத்ரா நிறுவன வழக் கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள் ளது. பாஜகவின் ஆதரவு நிர்வாகம் என்பதால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. நீதிபதிகளை அரசியல்  சூழ்ச்சி மூலம் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்த முயற்சிக்கிறது. மற்ற துறைகளையும் மிரட்டலுக்கு ஆளாக்குகிறது. பல ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் இஸ்லாமிய சிறுபான்மை மக்களை, குற் றம் நிரூபிக்கப்படாமல் வரைமுறையின்றி சிறையில் வைத்திருப்பது சட்ட விரோதமா னது. லவ் ஜிகாத், கேரளா ஸ்டோரி, கோவில் கள் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்டிருக் கும் இஸ்லாமிய வணிக கடைகள் அகற்றப் படும் என்பதெல்லாம், இஸ்லாமியவர்கள் மீதான பாஜகவின் வெறுப்பு அரசியலை காட்டுகிறது, என்றார்.

கரடியை கட்டியணைக்கும் அதிமுக

இதைத்தொடர்ந்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற ஓரிரு நாட்களில், முக்கிய  அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மீது அம லாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு, கைது செய்துள்ளது. தமிழக மக்களை வழக்க மான ஆசைகளை காட்டி, பொய்களை கூறி, சூழ்ச்சி வலையில் விழ வைக்கும் முயற்சியில் அமித்ஷா இறங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் பிரதமராக வர வேண்டும் என ஆசையை தூண்டியுள்ள அமித்ஷா, அவர் யார் என்று அறிவிக்கும் உரிமை அவருக்கு இல்லை. அந்த உரிமை பாஜகவின் தலைமை  பீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கே உண்டு. அதிமுக நிர்வாகி பொன்னையன் என்பவரி டம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என தெரிவித் திருப்பதுதான் நகைச்சுவையின் உச்சகட்டம். அதிமுகவினர் பாஜகவின் சூழ்ச்சிகளை கண் டறிந்து விலகிக்கொள்ள வேண்டும். பாஜக என்னும் கரடியை அதிமுக கட்டியணைத்துள் ளது. அதிமுக விட்டாலும், பாஜக அக்கட் சியை சூறையாடாமல் விடாது. கேரளா அரசும், தமிழக அரசும் வைக்கம் போராட்டத்தின், நூற்றாண்டு விழா மற்றும் தோல் சீலை போராட்டங்களின் வரலாறு களை மக்களிடத்தில் கூறி, இணைந்து நின்று  மக்களுக்கான சமூக நீதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில் தொடர்ந்து பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக  ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருவது, நஞ்சை பரப்பும் செயலாகும். குழந்தை திருமணத் திற்கு ஆதரவாக பேசுவது, தமிழ்நாட்டில் கல்வி முறையை மாற்ற வேண்டும் என  பேசும் ஆளுநர், தமிழகத்தோடு பாஜக ஆளும் மாநிலங்களை சற்றும் ஒப்பிட்டு பார்க்கி றாரா? என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. பாஜக பாம்பின் நிழலை போன்றது என்ப தற்கு சாட்சியாக, தற்போது பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, அதிமுக முன் னாள் முதல்வரை, ஊழல் குற்றவாளி என பேசியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க திராணியற்று அதிமுக நிற்பதிலிருந்து,

தமி ழக அரசியலில் பாஜகவை பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசத்தை முழுமையாக தனியாரி டம் ஒப்படைக்க பாஜக தயக்கமின்றி நடவ டிக்கை மேற்கொள்ளும். ஆனால். தற்போது எங்கு எதை திணித்தாலும் கம்யூனிஸ்டுகள் கேள்வி கேட்பது மிகப்பெரிய இடையூறாக அமைந்துள்ளதாக பாஜக கருதுகிறது. மக் களை தனியார்மய கொள்ளை லாபத்திற்கு காவு கொடுக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜக வின் வேகம், தனியார் முதலாளிகளை காக் கும் கேடயமாக உள்ளது. உதாரணமாக 10 துறைமுகங்கள், 16 விமான நிலையங்கள், கடன் தள்ளுபடி ஆகியவற்றை அம்பானிக் கும், அதானிக்கும் வாரி வழங்கியது பாஜக. எரிவாயு விலை, பெட்ரோல் விலை என மக் களை வாட்டி வதைத்து, வாயில் நுரை தள்ளு வதற்கான வேலையை செய்து வரும் பாஜக, விஷ மருந்து போன்றது. மக்கள் உரிமை களை பெற்று தருவதன் மூலம், ஆரோக்கிய மான வாழ்க்கை தரும் பாலாக கம்யூனிஸ்டு கள் திகழ்கின்றனர். அனைத்து ஜனநாயக முற்போக்கு அர சியல் கட்சிகளின் ஒரே இலக்கு, மக்களை வதைக்கும் பாஜகவை 2024 தேர்தலில் அடி யோடு அகற்ற வேண்டும் என்பதாகும். அதனை கருத்தில் கொண்டு நாம் அரசியல் பணியாற்ற வேண்டும், என்றார். முடிவில், ஆனந்த் நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில் கட்சி நிதியாக கோவை  வடக்கு நகரக்குழு சார்பில் ரூ.42 ஆயிரம்,  மதுக்கூர் ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் திரளானோர் பங் கேற்றனர்.