சேலம், பிப்.5- விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் அதிமுக நிர்வாகிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயி சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார ளித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வேடப்பட்டி கிராம பகுதியைச் சேர்ந்தவர் குப் புசாமி. விவசாயியான இவர் தனது குடும்பத் தினருடன் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகயை சந் தித்து புகார் மனு அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்க ளுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள் ளது. அந்த நிலத்தில் பெரிய மகன் அழகப் பனுக்கு வீடு கட்ட முயற்சி எடுத்தோம். அப் போது அதேபகுதியைச் சேர்ந்த அதிமுகவி னர் இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும், நீங்கள் இங்கே இருக்கக்கூடாது என வும், அடித்து துன்புறுத்தி கொலை மிரட் டல் விடுத்தனர். இதுகுறித்து கேட்டதற்கு அதி முக சட்டமன்ற உறுப்பினர் மணிக்கு நீங்கள் வாக்களிக்காததால் இந்த இடத்தில் இருக்கக் கூடாது என மிரட்டுகின்றனர். பல ஆண்டு காலமாக விவசாயம் செய்து வரும் இந்த நிலத்தை விட்டால், எங்களுக்கு வேறு வழி யில்லை. எங்கள் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும். இதுகுறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும், நடவ டிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசா ரணை நடத்தி கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித் தார்.