districts

img

அதிமுக எம்எல்ஏக்கள் கைது

மேட்டுப்பாளையம், நவ.2- மேட்டுப்பாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், இதற்கு காரணமான திமுக நகர் மன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனு மதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உட்பட 8 நகர மன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்த னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் கடந்த 31 ம் தேதி நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோர் கூட் டத்தில் கலந்து கொள்ளாததால், கூட்டத்தை நடத்த அதிமுக  நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவதற்கு ஆத ரவு தெரிவித்தனர். இதனால் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஒரு  கட்டத்தில் கைகளப்பாக மாற, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட் டது. இதனால் கூட்டமும் பாதியில் முடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக நகர்மன்ற உறுப்பி னர்கள், 17வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நகராட்சி அலு வலகத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேட்டுப் பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வ ராஜ், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி  அருண்குமார் ஆகியோர் கட்சி தொண்டர்களுடன் ஊர்வல மாக வந்து நகராட்சி அலுவலகம் நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.  மேலும், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு, சட் டம் ஒழுங்கை சீர்குலைத்தாக இரண்டு எம்எல்ஏக்களையும் கைது செய்தனர். அதே நேரத்தில் நகர்மன்ற கூட்டம் அரங் கில் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்ட 8 நகர மன்ற உறுப்பினர்களையும் போலீசார் கைது  செய்தனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.