districts

img

காட்டு யானைகளை விரட்ட ஏஐ தொழில்நுட்பம்

ஊருக்குள் நுழையும் காட்டு  யானைகளை எல்லையிலேயே விரட்ட, மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மலையடிவார கிராமத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் ஊருக்குள் வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதிக ளில் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிக மாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளி யேறும் வனவிலங்குகள் அருகில்  உள்ள குடியிருப்புக்குள் புகுந்து  விவசாய பயிர்களை சேதப்படுத் துவது அன்றாட பிரச்சனையாக உள்ளது.  வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்த வனப்பகுதியை ஒட்டி யானை தடுப்பு அகழி அமைத்தல், சோலார் மின் வேலி  அமைத்தல் உள்ளிட்ட முயற்சி கள் எடுக்கப்பட்டாலும் இவை போதிய பலனளிக்கவில்லை. இந்நிலையில், மலைக்காட்டை  ஒட்டியுள்ள  கெம்மராம்பாளை யம் ஊராட்சியில் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்  நுட்பமான ஏ.ஐ (Artificial intelli gence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரை கி.மீ தொலைவிற்கு வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முயற்சி மேற் கொண்டுள்ளனர். இந்த சோதனை முயற்சியில் யானை கள் வழக்கமாக ஊருக்குள் நுழையும் இடத்தை கண்டறிந்து அங்கு கண்காணிப்பு கேமரா  பொருத்தப்பட்டது. அத்துடன்  ஒலிபெருக்கியும் பொருத்தப்பட் டுள்ளது. இந்த கேமரா ஏ.ஐ  தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டுள்ள வீடியோ மானிட்டரில் இணைக்கப்பட்டுள்ளது. இது வனத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு சமிக்ஞை (சிக்னல்) கொடுக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவிற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால் இந்த கேமரா மூலம் கண்டறியப்பட்டு ஏஐ தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல்  அனுப்புகிறது. அங்கிருந்து வனப்பகுதியை ஒட்டி அமைக் கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட் டுள்ள ஆம்புலன்ஸ் சைரன் ஒலி,  யானைகளை கண்டால் மனிதர் கள் சப்தமிடும் ஒலி, ஜேசிபி இயந்திரம் இயங்கும் சப்தம்  உள்ளிட்ட பல்வேறு சப்தங்களை தானாகவே ஒலியாக எழுப்புகி றது. இவ்வாறு வெளியிடப்படும் சப்தத்தை கேட்டு யானைகள் சற்று நேரம் நின்று கவனித்த விட்டு பின்னர் அங்கிருந்து மீண் டும் வனப்பகுதிக்குள் திரும்பு கின்றன. இந்த சோதனை முயற் சியின் பயனாக வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளி யேற முயற்சிப்பது வெகுவாக குறைந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நவீன தொழில்நுட்ப முறை முழுமையாக வெற்றி யடைந்தால், மேலும், யானைகள்  வரும் சில இடங்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்ப டும் என கெம்பாரம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.