districts

img

வட்டியில்லா கடன் வழங்க விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

நாமக்கல், செப்.11-  விரட்டும் வறுமையில் இருந்து தற்காத்துக் கொள்ள அநியாய கந்து வட்டி கொடுமையில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகி வருகிற சூழலில், வட்டி யில்லா கடனை அரசே வழங்க வேண்டும் அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியு றுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றி யம், படைவீடு பேரூராட்சியில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட  சிறப்பு பேரவை கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட் டத் தலைவர் சி.துரைசாமி தலைமை தாங்கினார். இதில், சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். சங்க மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி தீர்மானங்களை முன்மொழிந்தார். இதில், அரசு பள்ளி சமூகவிரோதிகள் கூடாரமாக மாறி உள்ளதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செப்.28,29,30 ஆகிய தேதிகளில் பள்ளி பாதுகாப்பு இயக்கம் நடத்துவது, அத்தியாவசியப் பொருட்க ளின் விலை உயர்வால் விவசாயத் தொழிலாளர்க ளுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும், வேலை யின்மை காரணமாக கிராமப்புற தொழிலாளர்கள் வருமானம் இன்றி போதிய பொருளாதாரமில்லாத நிலையில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கட்ட முடியாமல் தவிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே அரசே தொழிலாளர்கள் நிலை உணர்ந்து  வட்டி  இல்லாமல் தொழிலாளர்களுக்கு கடன் வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இப்பேரவையில் திரளான விவசாய சங்க  தொழிலாளர்கள் பங்கேற்றனர்.