கோவை, நவ.23- கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்தோ - ஜெர்மன் இணைந்து வேளாண்மையில் மாறி வரும் கால நிலைக்கேற்ப பயிர் காப்பீட்டுக்கான உயரிய தொழில் நுட்ப திட்டத்தை செயல்படுத்தி வரு கிறது. இந்த திட்டத்தின் மூலம் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் இழப்பீடு தொடர்பாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி புதனன்று செய்தி யாளர்களிடம் கூறுகையில், பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி கள் என்பது, பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற் கைகோள் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை உட னுக்குடன் திரட்டுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நிவாரணங்கள் வழங்க முடியும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஜெர் மனிய நிதி உதவியுடன் தொலை தூர தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் ஏற் படும் வறட்சி, வெள்ள பாதிப்பு களை கணக்கீட்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு அளித்து வருகிறது.
கால நிலைக் கேற்ப புதிய பயிர் வகை ரகங் களை பயிர் செய்தும் கால்நடை வளர்ப்பு, காளான் வளர்ப்புகளின் மூலம் விவசாயிகளுக்கு நிலை யான வருமானத்தை உறுதி செய்ய முடியும். ஐரோப்பிய செயற்கை கோள் உதவியுடன் வானிலை தகவல்களை 12 நாட்களுக்கு ஒரு முறை அரசாங்கத்திற்கு தெரிவித்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப் படும். இத்திட்டத்தின் மூலம் கிராம வாரியாக பயிர் பரப்பளவு மற்றும் மகசூல் கணக்கிடுதல், வேளாண் பேரிடர்களுக்கான தடுப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ள செயற் கைகோள் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்படும் படங்களை கொண்டு பாதிப்புகள் கணக்கிடப்படும். பயனுள்ள முடிவு களை எடுக்க பயிர், மண், நீர் மற்றும் காலநிலை சார்ந்த தகவல்களை அறிய தொலைபேசி செயலி களும் உருவாக்கப்பட உள்ளது. காலநிலை அபாயத்தை நிர்வகிப்ப தற்கான அறிவாற்றல் மற்றும் இடஞ்சார்ந்த தரவு வலைதளத்தை உருவாக்குதல், டிஜிட்டல் மண் வரைபடங்கள் மூலம் வலிமை யான மண் சார்ந்த தகவல்கள் உரு வாக்குதல் போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும், என் றார். முன்னதாக, செய்தியாளர் களின் சந்திப்பின்போது காலநிலை காப்பீட்டு திட்ட இயக்குநர் ஜோகென் ராம்கி, நீர் நுட்ப மைய இயக்குநர் பழனிவேலன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.