கோயம்புத்தூர், ஜூன் 19- வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில், நான்கு மாண விகள் 200 க்கு 200 மதிப்பெண் கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இளநிலை, வேளாண், பொறி யியல் மற்றும் தோட்டக்கலைத் துறை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை புதனன்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், துணை வேந்தர் கீதாலட்சுமி இந்த தர வரிசை பட்டியலை வெளியிட்டார்.
இந்த தரவரிசையின்படி 33 ஆயிரத்து 973 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 29 ஆயிரத்து 969 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற் றுள்ளனர். இதில், 11,447 மாண வர்கள் மற்றும் 18,522 மாணவி கள் ஆவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், மாணவர்கள் முழுமை யான மதிப்பெண்ணான 200க்கு 200 பெற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் திவ்யா, ஷர்மிளா, மவுரின், நவீனா ஆகிய 4 மாண வர்கள் 200க்கு 200 மதிப்பெண் கள் முழு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
மேலும், நடப்பாண்டு 318 மாணவர்கள் 195 கட் ஆப் மதிப் பெண்களுக்கும் மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் 10,053 அர சுப் பள்ளிகளில் பயின்ற மாண வர்களும் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 413 பேருக்கு இட ஒதுக்கீட் டின் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என் பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 2024-25 கல்வியாண்டில் பட்டப்படிப்பு களுக்கான கலந்தாய்வுகள் ஜூன் 22 அன்று துவங்குகிறது.
இதுகுறித்து, வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் வெ. கீதாலட்சுமி கூறுகை யில், “நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக 33 ஆயிரத்து 973 பேர் விண்ணப் பித்து இருந்தனர். இதில் 29 ஆயி ரத்து 969 விண்ணப்பங்கள் தர வரிசை பட்டியலுக்கு ஏற்கப்பட்டன. அது தவிர முன்னாள் ராணுவத்தி னருக்கான பிரிவில் 234 பேர், அரசுப் பள்ளியில் படித்தவருக் கான பிரிவில் 10,053 பேர், விளையாட்டுப் பிரிவில் 701 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 84 பேர், தொழிற் கல்வி பிரிவில் 1,900 பேர் விண்ணப்பித்து இருந் தனர். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டி யல் தயாரிக்கப்பட்டது. தரவரிசை பட்டியலில் 200 - க்கு 200 மதிப்பெண் எடுத்து பட்டியலில் 4 மாணவர்கள் முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளனர்” என்றார்.