திருப்பூர், அக்.3 - 2020 ஆண்டு விவசாயிகளைப் படு கொலை செய்த ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்து தண்டனை வழங்கவும், கொலையுண்ட விவசாயிகளுக்கு நீதி வழங்க வும் வலியுறுத்தி திருப்பூரில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவ சாயிகள் போராடி வந்த சமயம், 2020 அக்டோ பர் 3 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்கிம் பூர்கேரி என்ற இடத்தில் ஒன்றிய இணை அமைச்சரின் மகன் வாகனத்தை ஏற்றி விவ சாயிகள், பத்திரிகையாளரைப் படுகொலை செய்தார். இந்த கோர படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிகையாளர் ஆகியோ ருக்கு நீதி வழங்க கோரி, அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத் திய தொழிற்சங்கங்கள் இணைந்து கறுப்பு நாள் என அறிவித்து போராட்ட அறைகூவல் விடுத்திருந்தன. அதன்படி திருப்பூரில் ஐக் கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற் சங்கங்கள் இணைந்து செவ்வாயன்று திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன் பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத் தினர். விவசாயிகள் படுகொலைக்கு காரண மான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டோனியை பதவி நீக்கி, தண் டனை வழங்க வேண்டும் எனக் கோரி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடரா ஜன், சிஐடியு மாநிலச் செயலாளர் டி.குமார், எல்.பி.எப். மாவட்ட துணைத் தலைவர் ரங்க சாமி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் அ. சிவசாமி, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் மாவட்டச் செய லாளர் மு.சம்பத், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சின்னசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள், தொழிலா ளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.