districts

img

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.15-  இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர் கள் பல்லக்காபாளையம் கிராமத்தில் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அரசுக்கு சொந்தமான இடத்தில் உடனடி யாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட் டத் தலைவர் சி.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் ஆர்.குரு சாமி, பொருளாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.