ஈரோடு, டிச. 27- ஊர் பெயர்களில் உள்ள சாதி பெயரை அரசு கெஜட்டில் இருந்து நீக்க வேண்டும். விவசாய தொழி லாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 7ஆவது மாநாடு அந்தி யூரில் வி.நடராஜன், டி.ரவீந்திரன் நினைவரங்கில் நடைபெற்றது. ஆர்.விஜயராகவன், நாச்சிமுத்து, செல்வி ஆகியோர் தலைமை வகித் தனர். மாநில துணைத் தலைவர் பி. வசந்தாமணி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி வேலை அறிக்கையும், பொருளா ளர் நாகராஜன் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள் மேட்டூர் அணை உபரி நீரை அந்தியூர் வட்டத்திலுள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும்.
வட்டக்கல்சேரி மற்றும் மேட்டுநாசுவம்பாளையம் போன்ற ஊர் பெயர்களில் உள்ள சாதி பெயரை அரசு கெஜட்டில் இருந்து நீக்க வேண்டும். பட்டா இல்லாத விவசாய தொழிலா ளர்களின் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் கிராமப்புற விவசாய தொழிலா ளர்களுக்கு 5 சென்ட் நிலம் வழங்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ளவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். சென்னையைப் போல் 60 வயதை எட்டியவர்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்பதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாசு ஏற்படுத்தும் இச்சி பாளையம் கயிறு பேக்டரியை தடை செய்ய வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடு களை புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், விதொச ஈரோடு மாவட்ட தலைவராக கே.ஆர்.விஜயராகவன், செயலாளராக கே.சண்முகவள்ளி, பொருளாள ராக எஸ்.மாணிக்கம், துணைத் தலைவர்களாக வி.ஆர்.மாணிக் கம், கே.பி.கனகவேல், துணைச் செயலாளர்களாக என்.நாகராஜன், ஏ.கே.பழனிசாமி உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.பழநிசாமி நிறை உரையாற்றினார்.