கோவை, ஆக. 30- இ-வாடகை என்ற பெயரில் விவசாயிகள் உபகரணங் களை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தொடங்கியுள்ள தாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெள்ளி யன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் பராமரிப்பு குறித் தான மாவட்ட அளவிலான ஒரு நாள் முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், வேளாண் சார்ந்த பல்வேறு கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கண பதி ராஜ்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேசம யம் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்தான கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. விவசாய உபகர ணங்கள் இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி, இதுகுறித்து பல்வேறு உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இ-வாடகை என்ற பெயரில் விவசாயிகள் உபகர ணங்களை வாடகைக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த செயலி மூலமாக உபகரணங்களை பதிவு செய்து பயன் படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு உபகரணங்களுக்கும் அதற்கு தகுந்தாற்போல் வாடகை வசூலிக்க இருப்பதாகவும் பெரும் பாலான உபகரணங்கள் ஒரு நாள் முழுவதும் பயன்படாது ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படும் என்பதால் அதற் கான பணத்தை மட்டும் கட்டி விவசாயிகள் அந்த உபகர ணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தென்னைத் திருவிழாவில் விவசாயம் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.