districts

img

விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

சேலம், ஜன.31- 100 வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளக் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண் டிய சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓமலூரில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்டத்  துணைத்தலைவர் சின்னராசு, தாலுகாச் செய லாளர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று சங்ககிரி அருகே  உள்ள சன்னியாசிபட்டி பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலச்  செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, தாலுகாச் செயலாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.