districts

img

விசைத்தறியாளர்களுக்கு 13.50 சதவிகித போனஸ் வழங்க உடன்பாடு

அவிநாசி, அக்.16- அவிநாசி பகுதி விசைத்தறி தொழி லாளர்களுக்கு இந்தாண்டு 13.50 சத விகித போனஸ் வழங்குவது என இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத் தறி கூலித் துணி உற்பத்தியாளர் சங்க  பிரதிநிதிகளும், விசைத்தறி தொழிற் சங்க நிர்வாகிகள்  இடையிலான பேச்சு வார்த்தை தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. இதில் தீபாவளி போனசாக 13.50 சதவிகிதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் இடப்பட்டது. இதில் உற்பத்தியாளர் சங்கம் தரப் பில் முத்துச்சாமி, செந்தில், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத் தின் மாநிலத் தலைவர் பி.முத்துச்சாமி, சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி ஏ.ஈஸ்வரமூர்த்தி, விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, ஏஐடியூசி செல்வ ராஜ், சேகர், ஏடிபி வி.பி.நடராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.