உதகை, ஜூலை 22- மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை திட்டமிட்டு உருவாக்கி குளிர் காயும் அதிகார வெறிக்கெதிராகவும், ஒன்றிய, மாநில பாஜக அரசுகளின் கையாலாகாத தனத்தை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் பெண் களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன இயக் கங்கள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆதிரா தலைமை ஏற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் இளம்பருதி ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்தார். இதில், விவ சாய சங்கச் செயலாளர் யோகண்ணன், சிபிஐஎம் தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், மாதர் சங்கத் தலை வர்கள் ஜெயலட்சுமி, பிரியா, பிரமிளா, ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் ராமன் கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும், ஒன்றிய மோடி அரசு உடனடியாக மணிப் பூர் பிரச்சனையில் தலையிட வேண்டும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டவும், பாதிக் கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆவேச முழக் கங்களை எழுப்பினர். முடிவில், மாதர் சங்க உதகை தாலுகாத் தலைவர் பானு மதி நன்றி கூறினார்.
நாமக்கல்
மணிப்பூர் வன்முறையை 3 மாதங் களாக வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசை கண்டித்து திருச்செங்கோட்டில் மார்க்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர ஒன்றியக் குழுக்களின் சார்பில், அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நகர செயலாளர் ஐ.ராயப்பன் தலைமை ஏற்றார். இதில், ஒன்றியச் செயலாளர் ஆர்.மனோகரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர். வேலாயுதம், மாவட்டக்குழு உறுப் பினர் ஏ.ஆதிநாராயணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், எம்.கணேஷ் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், நகரக்குழு உறுப்பினர் ஆர். நடேசன் நன்றி கூறினார். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அனைத்து பொது நல அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங் கிரஸ், சிபிஐ, சிபிஎம், மற்றும் மக்கள் நீதி மையம் திராவிட கழகம் மற்றும் மகளிர் குழுவினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
இதேபோன்று, தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் அருகே மணிப் பூரில் பெண்கள் மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண் டித்து மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸா மேரி,வே.விசுவநாதன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் அம்பு ரோஸ், மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாவட்டச் செய லாளர் வழக்கறிஞர் டி.மாதையன், பொருளாளர் கே.கோவிந்தசாமி, மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எம். சிலம்பரசன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதேபோன்று, உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் சி.கலாவதி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், மாவட்ட செய லாளர் பி.ஜீவா, மாவட்டத் துணைத் தலைவர் சி.அங்கம்மாள், அங்கன் வாடி ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் லில்லிபுஷ்பம், மாவட்டச் செய லாளர் கவிதா உள்ளிட்டோர் உரை யாற்றினர்.
சேலம்
மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசை கண் டித்து சேலத்தில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாதர் சங்க வட்டத்தலைவர் ம.துளசி தலைமை ஏற்றார். இதில், மாதர் சங்க நிர்வாகிகள் க.பெருமா, ஜ.ஞானசவுந்தரி, க.அஞ்சலம், சி. இந்திராணி, தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மா.ராமசாமி, மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் க.காளிதாஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
கோவை
இதேபோன்று, மணிப்பூர் கலவ ரத்தை கட்டுப்பட்ட தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவை அன்னூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னூர் பயனியர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியக்குழு தலைவர் பிரதீப் தலைமை ஏற்றார். இதில், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ், ஒன்றியச் செய லாளர் ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தீபிகா, அன்னூர் ஒன்றியத் தலைவர் பிரதீப், மாணவர் சங்கத்தின் அன்னூர் ஒன்றியச் செயலாளர் ஜெகதீஷ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், திரளானோர் பங் கேற்று கண்டன முழக்கங்களை எழுப் பினர்.
ஈரோடு
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஈரோடு, சூரம்பட்டியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.எஸ்.பிரசன்னா தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பா.லலிதா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வ நாதன், தலைவர் எஸ்.கே.ஸ்டாலின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகி என்.பழனிசாமி மற்றும் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி. நவீன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.