districts

img

ஒரு மாதத்திற்குப் பிறகு உதகை மலைரயில் சேவை துவக்கம்!

மேட்டுப்பாளையம், செப்.1- கனமழை காரணமாக ஏற்பட்ட  மண் சரிவுகளால் தடைப்பட்டிருந்த  மலைரயில் சேவை ஒரு மாதத்திற் குப் பிறகு மீண்டும் ஞாயிறன்று துவங்கியதால், சுற்றுலாப் பயணி கள் மகிழ்ச்சியடைந்தனர். உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை மலை ரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன் னூர் வழியே உதகைக்கு தினசரி  இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு  மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப்  பயணிகளையும் பெரிதும் கவரும்  இம்மலை ரயில், மழைக்காலங்க ளில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலா மல் அடிக்கடி தடைபட்டு நிற்பதும்,  இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைவதும் தொடர்கிறது. கடந்த ஆக.1 ஆம் தேதியன்று அதி காலை பெய்த கனமழை காரண மாக மலைரயில் செல்லும் பாதை யில் அடர்லி ரயில் நிலையம் முதல்  ஹில்குரோ ரயில் நிலையம் வரை  பல இடங்களில் மண் சரிவுகள்  ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்க ளும், பாறைகளும் தண்டவா ளத்தில் சரிந்தன. இதனால், கடந்த ஆக.1 ஆம் தேதியன்று வழக் கம் போல் காலை 7 மணிக்கு மேட் டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறப்பட்ட மலைரயில் கல்லார் ரயில் நிலையம் வரை  சென்ற நிலையில், ரத்து செய்யப் பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட் டது. இதனையடுத்து 20க்கும் மேற் பட்ட ரயில்வே பணியாளர்கள் தண் டவாள பாதையில் சரிந்து கிடந்த  மண்சரிவுகளை சீர் செய்யும் பணி யில் ஈடுபட்டனர். ஆனால், சீரமைப் புப் பணிகள் நடைபெற்ற பகுதிக ளில் தொடர் மழை காரணமாக பணி கள் தாமதமானதோடு, மேலும்  சில இடங்களில் சரிவுகள் ஏற்பட் டன. இதனால், மலைரயில் சேவை  அடுத்தடுத்து தேதிகளில் தொடர்ந்து ரத்து செய்யப்படுவ தாக ரயில்வே நிர்வாகம் அறிவித் தது. இந்நிலையில், கடந்த ஆக.7  மற்றும் 8 ஆகிய தேதிகளில் மட்டும்  கூட்டு ராணுவ பயிற்சிக்காக தமிழ கம் வந்திருந்த ஜெர்மன் ராணுவ உயரதிகாரிகள் பயணிக்க வசதி யாக சீரமைப்புப் பணிகள் ஒத்தி  வைக்கப்பட்டு மலை ரயில் இயக் கப்பட்டது. மீண்டும் அடுத்தடுத்த தேதிகளில் ரத்து நீடிக்கப்பட்டு கடந்த ஆக.31 ஆம் தேதியன்று வரை போக்குவரத்து ரத்து செய் யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால், ஏற்கனவே  முன்பதிவு செய்து மலைரயிலில் செல்ல ஆர்வமுடன் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம டைந்தனர். இந்நிலையில், ஏற்கனவே அறி வித்தபடி சீரமைப்பு பணிகள் முழு மையாக நிறைவடைந்த காரணத் தினாலும் மலை பாதையில் கடந்த  சில நாட்களாக மழை பெய்யாத  காரணத்தினாலும் ஞாயிறன்று காலை வழக்கம் போல் மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சுற்று லாப் பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது. கனமழை யால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரண மாக தொடர்ச்சியாக ஒரு மாதம்  ரத்து செய்யப்பட்டிருந்த உதகை  மலை ரயில் இயங்க துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.