உதகை, ஜன. 5- வெளி மாவட்டங்களிலி ருந்து நீலகிரிக்கு இறைச்சிக் காக பன்றிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பன்றிகள் மர்ம மான முறையில் இறந்து கிடந்தன. அதன் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பால் பன்றிகள் இறந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் காய்ச்சல் பர வல் தடுப்பு சங்கிலியை உடைக்கவும், மாவட்ட கால்நடை மருத்துவத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மசினகுடி பகுதியில் கால்நடை நோய் புல னாய்வு உதவி இயக்குனர் சிவ கிருஷ்ணன் தலைமையில் பன்றி பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தமாறு கால்நடை துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அம் ரித் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து கால்நடை இணை இயக்குநர் பகவத் சிங் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பன்றிகள் இறந்த இடத்தில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் அந்த பகுதி கால்நடை மருத்துவக்குழு சோதனை நடவடிக்கை மேற்கொண்டதில் எந்த பண்ணை யிலும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ இந்நோய் தொடர்பான இறப்புகளோ எதுவும் இல்லை. கால்நடை மருத்துவக்குழு பன்றி வளர்ப்பு உரிமையா ளர்களிடம் உயிரி பாதுகாப்பு முறைகளான பண்ணையை சுற் றிலும் வேலி அமைத்து காட்டுப்பன்றிகள் ஏதும் பண்ணையில் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பண்ணையை சுற்றிலும் சோடியம் ஹைப்போ குளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போ குளோ ரைட (பிளிச்சிங் பவுடர்), காஷ்டிக் சோடா தெளிக்குமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவக்குழு நாள்தோறும் பண்ணைகளை கண்காணித்து வருகின்றனர். பன்றி வளர்ப்பு பண்ணை உரி மையாளர்கள் தங்கள் வளர்க்கும் பன்றிகளை இந்த நோயின் தாக்கம் குறையும் வரை விற்பனைக்காக வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது. என்றும் மீறினால் அவர்கள் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் நீலகிரிக்கு பன்றிகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நோயானது பன்றிகளை மட்டுமே தாக்கக்கூடியது. மற்ற விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பரவாது, எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது, என்றார்.