திருப்பூர், ஜூலை 9 – அரசியல் சட்டம் கூறியுள்ள அடிப்ப டைக்கு எதிராக இந்தியில் பெயர் வைத்து, கடும் ஒடுக்குமுறை சரத்துகள் கொண்ட குற்றவியல் சட்ட நடைமு றையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த குற்றவியல் சட் டங்களை எதிர்த்து நீதிமன்றப் பணி புறக் கணிப்புப் போராட்டத்தை நடத்தி வரும் வழக்கறிஞர்கள் மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக வும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத் தினர். இந்நிலையில் செவ்வாயன்று திருப் பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திருப்பூர் பார் அசோசியசேன், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியே சன் தலைவர் ஈ.பூபேஸ் தலைமை வகித் தார். திருப்பூர் பார் அசோசியேசன் செய லாளர் எஸ்.பத்மநாபன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். ஏ.சுப்புராஜ், செயலாளர்கள் ஆ.அமர் நாத், குமரன், சங்க நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர்கள் எம்.பழனிச்சாமி, பி.மோகன், சி.எம்.அருணாச்சலம், லதாமேஸ்வரி ஆகியோர்களும் பெண் வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர் கள் திரளாகக் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி வழக்கறிஞர் வை.ஆனந்தன், பி.மோகன், எஸ்.ஏ.தமயந்தி ஆகி யோர் உரையாற்றினர். இதில் சுமார் நூறு வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட னர்.