உடுமலை, ஜூலை 31- உடுமலை செயற்பொறியாளர் அலு வலகத்தில் வேலை செய்யும் நிர்வாக அலுவலர் சட்ட விதிகளுக்கு புறம்பாக தன்னுடைய அதிகாரங்களை பயன்ப டுத்தி தொழிலாளர்களை பழிவாங்குகி றார். அவர் மீது துறைவாரியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என செவ்வா யன்று நடைபெற்ற மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட் டுள்ளது. உடுமலை மின் வட்டக் கிளையின் 11ஆவது பொதுக்குழு கூட்டம் சங்கத் தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கோவை மண்டலச் செயலாளர் மைக்கேல் துவக் கவுரை ஆற்றினார். கிளைச் செயலா ளர் கிருஷ்ணகுமார் அறிக்கையை முன் வைத்தார். பொருளாளர் பொன்ராஜ் வரவு செலவு அறிக்கை முன்வைத்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், சிஐடியு மின் ஊழியர் மத் திய அமைப்பின் கிளைத் தலைவர் ஜெகா னந்தா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிழக அரசு மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மின்வாரிய தொழிலாளர்களுக்கு பழைய பென் ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். தொழிலாளர் விரோத முத்தரப்பு ஒப் பந்தம் திருத்தம் செய்ய வேண்டும். மேலும், வாரிய ஆணை 2/2022 ரத்து செய்ய வேண்டும். உடுமலை செயற் பொறியாளர் அலுவலகத்தில் தொழி லாளர்களை பழிவாங்கும் நிர்வாக அலு வலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்கு மீது உள்ள துறை நடவடிக்கை களை ரத்து செய்ய வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.