districts

img

தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ஈரோடு, டிச.28- ஈரோடு மாநகராட்சியில் அறி விக்கப்பட்ட தூய்மைப் பணியா ளர்கள் வேலைநிறுத்தம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில், 1500 பேர் பணியாற்றி வருகின்றனர்.  மாநகராட்சியில் நிரந்தரப்படுத்தப் படாத தினக்கூலி அடிப்படையில் சுயஉதவிக்குழு மூலம் பணியாற் றும் பொதுசுகாதார பிரிவு தொழி லாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் பெற்று வந்தனர்.  இதை அடிப்படையாகக் கொள்ளும் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் தடை செய்துள்ளது. ஏற்க னவே நடைமுறையில் உள்ள அர சாணையின்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மாநகராட் சியில் தூய்மைப் பணியாளர்கள் மத் தியில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இதனை வலி யுறுத்தி எழுத்துப்பூர்வமான கடி தத்தை கொடுத்துள்னர். ஆயினும் மாமன்ற கூட்டத்தில் உயர்நீதிமன் றம் தடை செய்த அரசாணையின் அடிப்படையிலேயே ஊதியம் நிர் ணயிக்கப்பட்டது.  இதனால் தூய்மைப் பணி செய் யும் நிரந்தரப்படுத்தப்படாத தொழி லாளர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே தினக்கூலி தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணை 62-ன் படியான குறைந்த பட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.725 வழங்க வேண்டும். தூய் மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும்  ஒப்பந்தங்கள் அனைத் தையும் ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சிஐடியு உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட் டமைப்பின் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் 13-12-2023 அன்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங் கப்பட்டது.  இது தொடர்பாக, தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)  என். ராகவன் தலைமையில் வியாழ னன்று பிற்பகலில் இரண்டாவது கட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் தொழிற்சங்கங் கள் (சிஐடியு), சார்பில், எஸ்.சுப்பிர மணியன், எஸ்.மாணிக்கம்,  ஏஐடி யுசி சார்பில் எஸ்.ஜெகநாதன், எஸ். சின்னசாமி, ஆர்.ஞானசேகரன், எஸ்.மூர்த்தி, ஏடிடிடிபி கே.மாரியப் பன், பிஎஸ்டியு எம்.குணசேகரன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் (வருவாய்) என்.அண் ணாதுரை, சுகாதார  அலுவலர்கள் ஜாகீர் உசேன், தங்கராஜ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையின் நிறை வில், தொழிற்சங்கங்களின் முக்கிய  கோரிக்கையான தொழிலாளர் துறை  அரசாணை 62, நாள்:11-10-2017-ன் படியான குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ.725/- ஐ உடன் வழங்குமாறு மாநகராட்சி நிர்வா கத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தினார். மேலும், மேற்கண்ட குறைந்தபட்ச ஊதியத்தை 1-4-2023 முதல் முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும். நிலுவைத் தொகைகளை (அரி யர்ஸ்) வழங்க வேண்டும் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் அடுத்த (4-1-2024) பேச்சுவார்த்தையின் போது எழுத்து மூலமாக பதில ளிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், தொழிற்சங்கங்கள் அறி வித்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண் டார். இதுபற்றி அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்தாலோ சித்து, தொழிலாளர் உதவி ஆணை யரின் அறிவுறுத்தலை ஏற்று  வேலைநிறுத்தத்தை தற்காலிக மாக ஒத்திவைப்பது என  தீர்மானித் தனர்.