தருமபுரி, செப்.27- தென்பெண்ணையாற்றின் உபரி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், வேடகட்டமடுவு ஊராட்சியில் உள்ள பாம்பாறு பாசன கால்வாய் மூலம், தென்பெண்ணையாற்றின் உபரிநீரை விவசாயத்திற்கு பயன்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். வேடகட்டமடுவு ஊராட்சியில் உள்ள 18 கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர வேண்டும். அரசு வீடு வழங்கியவர்களுக்கு மீண்டும் வீடு வழங்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். வேட கட்டமடுவு ஊராட்சியில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சுடுகாட்டு வசதி செய்து தர வேண் டும். கொசு மருந்து அடித்து சுகா தாரத்தை பாதுகாக்க வேண்டும். டி.ஆண்டியூர் பட்டியலின மக்க ளுக்கு சர்வே எண்:19/1-இல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மூன்றப்பட்டி கிராம பழங்குடியின மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். தென்பெண் ணையாறு தொட்டிக்கல் மடுவில் தடுப்பணை கட்ட வேண்டும். பாம்பாறு பாசனக்கால்வாயை தூர் வாரி, புனரமைக்க வேண்டும். அம்மாபேட்டை முருகன் கோவிலி ருந்து, உயர்நிலைப்பள்ளி வரை தெருவிளக்கு கம்பம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அரூர் வட்டம், வேடக்கட்டமடவு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாநிலக் குழு உறுப்பினர் லெனின், ஒன்றிய நிர்வாகிகள் வேலாயுதம், துளசி, தங்கராஜ், வீரப்பன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.