districts

ராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை

நாமக்கல், அக்.29- ராசிபுரத்தில் புதிய மினி தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என, ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு சாலை, ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் செவ்வாயன்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. உமா தலைமை வகித்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், மேயர் து.கலாநிதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலங் களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலை வருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், 34 பயனாளிகளுக்கு ரூ.22.45 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராஜேஸ் குமார் எம்.பி., பேசுகையில், தமிழ்நாட் டின் தொழில் வளர்ச்சிக்காக, அனை வரையும் உள்ளடக்கிய நிலையான மற் றும் நீடித்த வளர்ச்சியினை பெறும் நோக்கமாக பல்வேறு கடனுதவி திட்டங் கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மூலமாக செயல்படுத்தப் பட்டு வருகின்றது. உலக முதலீட்டாளர் மாநாடு - 2024 இல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1693.83 கோடி நிர்ணயிக்கப்பட்டு 325 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 8,832  வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட 850 ஹெக்டர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கிட இடம் தேர்வு செய் யப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றது. சிப்காட் தொழில் பூங்கா அமைக் கப்படுவதால் நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும். விரைவில் ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். மேலும், சுமார் ரூ.90 கோடி மதிப்பில் டென்மார்க் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன பால் பதப் படுத்தும் ஆலை, சுமார் ரூ.196 கோடி  மதிப்பீட்டில் நாமக்கல் நகரின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன, என்றார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ. பூபதி, மாவட்ட தொழில் மைய பொது  மேலாளர் வீ.சகுந்தலா, நாமக்கல் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தலைவர் ந. இளங்கோ, தாட்கோ மாவட்ட மேலா ளர் பா.ராமசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கா.முருகன், மண்டல மேலாளர் க.ஸ்ரீநிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.