ஜி.ராமகிருஷ்ணன் உறுதி கோவை, ஆக.1- புலியகுளம் மசால் லேஅவுட் பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் உறுதியளித்துள்ளார். கோவை, புலியகுளம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை சார்பில், வியாழனன்று மக் கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிபிஎம் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநகராட்சி 64 ஆவது வார்டுக்குட்பட்ட மசால் லேஅவுட் பகுதி மக்களின் வீடுக ளுக்கு சென்று, பொதுமக்களைச் சந்தித்து பேசினார். இதைத்தொ டர்ந்து அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை ஜி. ராமகிருஷ்ணனிடம் வழங்கினர். அம் மனுவில், கோவை மாநகராட்சிக் குட்பட்ட புலியகுளம் மசால் லே அவுட் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் தினக்கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வரு வாயை வைத்து, வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை குடிசை மாற்று வாரியம் கையகப்ப டுத்தி, 122 பேருக்கு வீடு கட்ட இடத்தை அளவு செய்து கொடுத்த தில், அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குடிசை மாற்று வாரியம் கொடுத்தது முதல் இவ் வாண்டு வரை அப்பகுதியில் (1980) முழு பணம் கட்டியும், சிலர் தனக்கு சொந்தமான இடத்திற்கு என்ஓசி (NOC) பெற்றும் உள்ளனர். ஆனால், தற்போது வரை மசால் லேஅவுட் பகுதி நிலம் இன்னும் வருவாய்த் துறை வசம் பெயர் மாற்றம் செய் யப்படவில்லை. சொந்த இடம் வாங்கி வீடு கட்டுவதற்கு போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் இப்பகுதி மக்களுக்கு, குடியி ருக்கும் இடத்திலேயே வகை மாற் றம் செய்து பட்டா வழங்குவதற்கு தாங்கள் பரிந்துரை செய்ய வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அம்மனுவை பெற் றுக்கொண்ட ஜி.ராமகிருஷ்ணன் சம் மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதி காரிகளிடம் பேசி உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம், கிழக்கு நகரக்குழு உறுப்பி னர் த.நாகராஜ், கிளைச் செயலா ளர்கள் நாகராஜ், தீபா.மகேந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மைக்கேல் சாமி, மாரிமுத்து உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.