districts

இடைநின்ற 6,338 மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல், ஆக.20- நாமக்கல் மாவட்டத்தில் பள் ளிக்கு வராமல் இடைநின்ற 6338 மாண வர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பில் பள்ளி  செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட (6 முதல் 18 வயது வரை)  பள்ளி பொதுத்தளத்தில் உள்ள மாண வர்கள் கணக்கெடுப்பு தொடர்பான, மாவட்ட அளவிலான கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் ச.உமா பேசுகை யில், புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் குழந்தைகள் கல்வி கற்க,  நாமக்கல் ஒன்றியத்தில் 4 மையங் கள், நாமகிரிப்பேட்டை, பள்ளி பாளையம் மற்றும் கபிலர்மலை ஒன் றியத்தில் தலா 1 மையம் ஆரம்பிக் கப்பட்டு, 111 குழந்தைகள் 7 தன்னார் வலர்களுடன் மையங்கள் செயல் பட்டு வருகிறது. நாமக்கல் ஒன்றியம் சூரக்காபாளையம், நகராட்சி வார்டு 37, புதுச்சத்திரம் ஒன்றியம், அண்ணா நகர், எருமப்பட்டி ஒன்றியம் பொட்டி ரெட்டிப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி மற்றும் கபிலர்மலை ஒன்றியம் பல்லா பாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பள்ளி செல்லா  குழந்தைகளை கண்டறிந்து

பள்ளி களில் சேர்க்கப்பட்டனர். நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தை கள், கணக்கெடுப்பு செல்போன் செய லியின் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப் டம்பர் மாதங்களில் நடைபெற உள் ளது. இக்கணக்கெடுப்பில் பள்ளிப் பொதுத்தளத்தில் உள்ள 6,338 மாண வர்கள் கண்காணிக்கப்பட உள்ள னர். மாணவர்களின் இருப்பிடத் திற்கே சென்று, கள ஆய்வு மேற் கொண்டு, அவர்களின் தற்போதைய  நிலையை பதிவேற்றம் செய்ய வேண் டும். மேலும், 30 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரியாத மாண வர்களையும், கண்காணிக்க வேண் டும். இந்த கணக்கெடுப்பு பணியில் பள்ளியில் சேர்க்க வேண்டிய  குழந்தை என கண்டறியப்பட்டவர் களை, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களால் பள்ளியில் சேர்க்க இயலவில்லை என்றால், அம்மாண வர்களை தொடர்புடைய பிற துறை  அலுவலர்கள் உதவியுடன், பள்ளி யில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட வேண்டும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்க திட்ட ஒருங்கி ணைப்பாளர்கள், அரசுப்பள்ளி தலைமை ஆசியர்கள் கலந்து கொண் டனர்.