districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தாராபுரம் பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது

தாராபுரம், ஜூன் 21 – தாராபுரம் பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 6  நபர்களை போலீசார் கைது செய்தனர். தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு ஈரோட்டில் இருந்து இரவு தனியார் பேருந்து ஒன்று பழனி செல்வதற்காக வந்தது.  பேருந்தை அரச்சலூர் அழகுகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த பூபதி (36) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது 6 பேர்  கொண்ட ஒரு கும்பல் பேருந்திற்குள் ஏறி பூபதியை தாக்கி  கீழே இறக்கி உள்ள்னர். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டி ருந்த பயணிகள் இரண்டு பேர் அதை செல்போனில் படம்  பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்போ னில் படம் பிடித்த சையது ரிஸ்வான் மற்றும் சையது லியாவு தீன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 6 பேரையும் பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில  நாட்களுக்கு முன்பு தாராபுரம் வீராட்சிமங்கலம் பகுதியை  சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் (44) என்பவருக் கும், பூபதிக்கும் இடையே டைமிங் பிரச்சனை ஏற்பட்டுள் ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் அவரது  நண்பர்கள் இரும்பன் (45), முருகானந்தம் (36), காளிதாஸ் (44)  அஜித்குமார் மற்றும் தாமோதரன் ஆகியோரை அழைத்து  வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் இரும்பன், முருகா னந்தம், காளிதாஸ், அஜித்குமார், தாமோதரன் ஆகிய 6 பேர்  மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சம்பவத்தில் காயமடைந்த பூபதி மற்றும் சையது ரிஸ்வான், சையது லியாவூதீன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் ஒருவருக்கு சிறை

திருப்பூர், ஜூன் 21 - திருப்பூரில் ஜூன் 6ஆம் தேதி குட்கா விற்றுக் கொண்டி ருந்த சரவணன் (38) என்பவர், சசிகுமார் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிந்து கைது செய் யப்பட்டார். ஆம்பூர், காந்திநகர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த சரவணன், தற்போது அம்மாபாளையம் பகுதியில் வசித்து வந்தார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை யில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்  குமார் அபினபு உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ள சரவணனை ஓர் ஆண்டு குண்டர் தடுப்புச்  சட்டத்தில் சிறையில் வைக்க ஆணை வழங்கப்பட்டது.

குறைதீர்க் கூட்டம்

திருப்பூர், ஜூன் 21– திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் வியாழனன்று  பிற்பகல் 3 மணிக்கு முன் னாள் படைவீரர் மற்றும் அவ ரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில்  முனைவோர் கருத்தரங்கம் நடைபெறுகிறது.  இதில் தங்கள் புகார்க ளைத் தெரிவித்து பயன டைவதுடன், வேலை வாய்ப்பு முகாமில் சிறப்பு திட்டங்கள், வேலை வாய்ப்பு, பயிற்சி மற்றும்  உதவிகள் பற்றி அறிந்து  கொள்ளலாம் என ஆட்சிய ரக செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

தேர்தல் நடத்த வலியுறுத்திய பூ விவசாயிகள் கைது 

ஈரோடு, ஜூன் 21- மலர் விவசாயிகள் சங்கத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்து தேர்தல் நடத்தக் கோரிய விவசாயிகள் புதனன்று ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் மலர் விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்த விவசாயிகள் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம் என்ற சங் கத்தை உருவாக்கினர். இச்சங்கம் 2000க்கும் மேற்பட்ட மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு இயங்கி வந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்களித்தனர். தலைவராக முத்து சாமி, செயலாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக குழு வினர் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டு தோறும் பொதுக்குழு, செயற்குழுவை நடத்து வது எனவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது எனவும் விதிகள் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், விதிப்படி நடக்கவில்லை. தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தாமல்  32 பேரை  மட்டும் கொண்டு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங் கம் என்று புதிய சங்கத்தை தொடங்கியுள்ளதாக தெரிகி றது.  இதுகுறித்து கேள்வி எழுப்பிய விவசாயிகளை சந்தையில் பூ விற்க விடாமல் தடுத்துள்ளனர். காவல்துறை, வருவாய்த் துறையில் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சங்கங்களின் பதிவாளரும் நடவடிக்கை எடுக்க வில்லை.  இந்நிலையில், 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சொத்துக்களோடு, சுங்க பணத்தோடு இயங்கி வரும் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக சேர்க்க வேண் டும். முறையாக தேர்தல் நடத்த வேண்டும்.  நடைபெற்ற ஊழல், மோசடி குறித்து புகாரின் மீது வழக்கு பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண் ணாவிரதமிருப்பது என மலர் விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.  அதன்படி ஈரோட்டில் போராட்டத்திற்கு வந்த 44 பெண் கள் உள்ளிட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். சத்திய மங்கலம் மற்றும் கோபியில் இதேபோல பூ விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், ஜூன் 21 – தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி காங்கே யம் மற்றும் மூலனூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ  முகாம் நடத்தப்படுகிறது. காங்கேயத்தில் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற் றும் மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாமை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரி சோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார் பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறி யும் பரிசோதனை, முழு இரத்த பரிசோதனைகள், பொது மருத் துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண்,  காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத் துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ  ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி  முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத சிகிச்சை ஆலோச னைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகா மில் அரசு மருத்துவ காப்பீட்டில் பங்குதாரர்களான தனியார்  மருத்துவமனைகளும் பங்கேற்க உள்ளனர். முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை, தாலூக்கா அரசு மருத்துவமனை  மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல் சிகிச்சைகள் அளிக்கப்படும். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவ னம் செலுத்தப்படுகிறது. இம்முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் செவ்வாயன்று அதி காரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

சேலம் பெரியார் பல்கலை.,க்கு அபராதம்

சேலம், ஜூன் 21- சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரின் பிரதிநிதி  விஷ்ணுமூர்த்தி ஆஜராகாததால், சென்னை தொழிற் தீர்ப்பா யம் ரூ.4 ஆயிரம்  அபராதம் விதித்தும், 26 ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.  சென்னை தொழிற்தீர்பாயத்தில் சேலம் பெரியார் பல் கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர் சங்கம் தொடுத்த பணிநிரந்தர வழக்கு (09/2019) விசாரணைக்கு வந்தது. இதனுடன் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மூவரின் புகார் (02/2022) வழக்கும் நிர்வாகத்தரப்பு குறுக்கு விசாரணைக்காக  வந்தது. இந்த விசாரணையில் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் அவ ரது வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள்.  ஆனால், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரின் பிரதிநிதி  விஷ்ணுமூர்த்தி ஆஜராக வில்லை. இதனால் நீதிபதி தீப்தி அறிவுநிதி, தனது  கடுமையான கண்டனத்தை தெரிவித் தார். மேலும், ஒவ்வொரு வழக்கிற்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் நான்காயிரம் ரூபாய் அபராதத்தை சேலம் பெரி யார் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விதித்து உத்தரவிட் டார். மேலும், வருகிற 26/06/23க்கு முன்பு அபராத தொகை யினை பல்கலைக்கழக பதிவாளர் மனுதாரர்களுக்கு வழங்க  வேண்டும் என்றும், 26.06.2023 அன்று நிர்வாக தரப்பில் சாட்சி ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகாத பட்சத்தில் சாட்சி  சொல்ல தகுதியிழக்க நேரிடும் என்று எச்சரித்து நீதிபதி  வழக்கை ஒத்தி வைத்தார்.

குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் நடவடிக்கை

உதகை, ஜூன் 21- குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பா மல், பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் நீலகிரி மாவட்ட நீதிபதி எச்ச ரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான  அப் துல் காதர் அறிவுறுத்தலின்படி ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலா ளர் முறை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் கலந்து கொண்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு  செயலாளரும், நீதிபதியுமான லிங்கம்  கூறியதாவது, 14 வயது வரை உள்ள குழந்தை களை பொருள் ஈட்டும் நோக்கத்துடன் வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம் ஆகும். அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு  அனுப்பும் உரிமை பெற்றோர்க ளுக்கு இல்லை.  நல்ல கல்வியை வழங்கு வதே பெற்றோர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுபோன்று குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை பார்த்தாலோ, தெரிந்து கொண்டாலோ அதைப் பற்றிய தக வலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விற்கு தெரிவிக்கலாம்.  குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல்  பொது இடங்களில் இருப்பதை பார்த்தாலும் அதனையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் புகார் அளிக்கலாம். 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துபவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என் றார். இம்முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் துணை சட்ட உதவி பாது காப்பு ஆலோசகர் குணசேகரன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஷோபனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விபத்தில் மாணவர் பலி

கோவை, ஜூன் 21- சேலம் மாவட்டம், சின்ன சேலத்தை சேர்ந்தவர் அருண் குமார் (20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில்  பொறியியல் மெக்கானிக் 3  ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி சக மாணவரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் குமார் (20) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில், கோவில் பாளையத்தில் உள்ள தனி யார் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள சென் றார். குரும்பபாளையம் –  காளப்பட்டி சாலையில் ஒரு  வளைவில் திரும்பியபோது, லாரி மோதி விபத்து ஏற்பட் டது. சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். ராம நாதபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் படுகாயமடைந்தார்.

மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

திருப்பூர், ஜூன் 21 - திருப்பூர் மாநகராட்சிஇ மூன்றாவது மண்டல அலுவல கத்தில் வைக்கப்பட்டிருந்த வீடுகளில் குப்பை சேகரிக்க பயன் படுத்தும் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆய்வு  செய்தார். திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள் ளன. இவற்றில் 15 வார்டுகள் ஒரு மண்டலம் என நான்கு  மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணை யாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சி பகுதிகளில்  பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மக்கள்  பிரச்சனைகளை தீர்த்து வருகிறார். இந்நிலையில், மாநக ராட்சி மூன்றாவது மண்டலத்தில் உள்ள வார்டுகளான 33  முதல் 35 வரையும், வார்டு 44 முதல் 51 வரையும், 56 மற்றும்  58 முதல் 60வது வார்டு என 15 வார்டுகளில் கடந்த 2020 ஆம்  ஆண்டு முதல் வீடு வீடாக சென்று குப்பையை வாங்க 72 எலக்ட் ரிக் வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள்  வாங்கி மூன்று ஆண்டுகள் ஆனதால், பல வாகனங்களில் சரி யான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த வாகனங்கள் பயன்படாமல் இருப்பதை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் புதனன்று ஆய் மேற்கொண்டார்.  இந்த ஆய்வில் அந்த எலக்ட்ரிக் வாகனத்தை பயன் படுத்தும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் எலக்ட்ரிக் வாகனத்தில் உள்ள பழுது மற்றும்  பயன்படுத்தும் போது ஏற்ப்படும் சிரமங்களை மாநகராட்சி ஆணையாளரிடம் விளக்கிக் கூறினர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரி யப்பனவர் சிறிய அளவிலான பழுதுகளை விரைந்து முடிக்க  உத்தரவிட்டார். இந்த நிலையில் மூன்றாவது மண்டலத்தில் உள்ள 72 எலக்ட்ரிக் வாகனத்தில் 53 வாகனங்கள் மட்டுமே  தற்போது பயன்பட்டு வருகிறது. 19 எலக்ட்ரிக் வாகனங்கள்  பழுது அடைந்துள்ளது. இந்த 19 எலக்ட்ரிக் வாகனங்களும் விரைவில் சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழா: ஜூன் 24இல் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், ஜூன் 21 – தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி காங்கே யம் மற்றும் மூலனூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ  முகாம் நடத்தப்படுகிறது. காங்கேயத்தில் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற் றும் மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாமை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன. ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரி சோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார் பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறி யும் பரிசோதனை, முழு இரத்த பரிசோதனைகள், பொது மருத் துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண்,  காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத் துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ  ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி  முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத சிகிச்சை ஆலோச னைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகா மில் அரசு மருத்துவ காப்பீட்டில் பங்குதாரர்களான தனியார்  மருத்துவமனைகளும் பங்கேற்க உள்ளனர். முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை, தாலூக்கா அரசு மருத்துவமனை  மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல் சிகிச்சைகள் அளிக்கப்படும். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவ னம் செலுத்தப்படுகிறது. இம்முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் செவ்வாயன்று அதி காரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தாராபுரம் பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது

தாராபுரம், ஜூன் 21 – தாராபுரம் பேருந்து நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட 6  நபர்களை போலீசார் கைது செய்தனர். தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு ஈரோட்டில் இருந்து இரவு தனியார் பேருந்து ஒன்று பழனி செல்வதற்காக வந்தது.  பேருந்தை அரச்சலூர் அழகுகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த பூபதி (36) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது 6 பேர்  கொண்ட ஒரு கும்பல் பேருந்திற்குள் ஏறி பூபதியை தாக்கி  கீழே இறக்கி உள்ள்னர். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டி ருந்த பயணிகள் இரண்டு பேர் அதை செல்போனில் படம்  பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்போ னில் படம் பிடித்த சையது ரிஸ்வான் மற்றும் சையது லியாவு தீன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 6 பேரையும் பிடித்து  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில  நாட்களுக்கு முன்பு தாராபுரம் வீராட்சிமங்கலம் பகுதியை  சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் (44) என்பவருக் கும், பூபதிக்கும் இடையே டைமிங் பிரச்சனை ஏற்பட்டுள் ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் அவரது  நண்பர்கள் இரும்பன் (45), முருகானந்தம் (36), காளிதாஸ் (44)  அஜித்குமார் மற்றும் தாமோதரன் ஆகியோரை அழைத்து  வந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் மற்றும் இரும்பன், முருகா னந்தம், காளிதாஸ், அஜித்குமார், தாமோதரன் ஆகிய 6 பேர்  மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சம்பவத்தில் காயமடைந்த பூபதி மற்றும் சையது ரிஸ்வான், சையது லியாவூதீன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.