districts

தவறிழைக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

ஆட்சியர் எச்சரிக்கை ஈரோடு, ஆக.31- பெருந்துறை அருகே சிப்காட்  வளாகத்தில், தவறிழைக்கும் தொழிற் சாலைகள் மீது சட்ட ரீதியிலான நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா எச்ச ரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறை மற்றும் ஈங்கூர்  கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து 709 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில், தற்பொழுது 157 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் தனி சுத்தி கரிப்பு நிலையங்களுடன் கூடிய 43  சாயத்தொழிற்சாலைகள் மற்றும் 9  உறுப்பினர் சாயத்தொழிற்சாலை களைக் கொண்ட ஒரு பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் (டெக்ஸ்டைல்ஸ்) அடங்கும். இது தவிர 14 உறுப்பினர் தோல் தொழிற் சாலைகளுக்கான ஒரு பொது கழிவு நீர் நிலையம், 2021 ஆம் ஆண்டு தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நட வடிக்கையால் மின் இணைப்பு துண் டிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகளுக்கான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், அதன் 14 உறுப்பினர் தோல் தொழிற் சாலைகளும் தற்சமயம் இயக்கத் தில் இல்லை. தொழிற்சாலைகளிலி ருந்து வெளியேறும் கசிவுநீரால் பாலத் தொழுவு குளம் மாசடைவதாக பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார் கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிப்காட் தொழிற் சாலை மற்றும் பாலத்தொழுவு குளம் ஆகியவை தமிழ்நாடு மாசு கட்டுப் பாடு வாரியத்தால் தொடர்ந்து ஆய்வு  செய்யப்படுகிறது. நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக கவனத் திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெருந் துறை சிப்காட்டில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்ய தலா மூன்று அதிகாரி களை கொண்ட மூன்று சிறப்புக் குழுக்களை அமைக்கப்பட்டுள்ளது. அதிரடியாக இக்குழுக்கள் (ஆக.30 முதல் செப்.1) மூன்று தினங்கள்  ஆய்வு மேற்கொண்டு அறிக்கை யினை சமர்ப்பிக்கும். ஆய்வு முடிவு களின் அடிப்படையில் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், சிப்காட் வளாகத்தில்  உள்ள அனைத்து தொழிற்சாலை களும் மாவட்ட நிர்வாகம் மற்றும்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தால் தொடர்ந்து கண்காணிக்கப் படும்.  தவறிழைக்கும் தொழிற்சாலை கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.