districts

கோவை முக்கிய செய்திகள்

தொழிலாளர்கள் அமர அனுமதிக்காத  நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு, டிச.6- வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்கள் அமர அனுமதிக்காத நிறுவனங்களுக்கு ஈரோட்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் இருக்கை வசதி  செய்து தர வேண்டுமென்பது அவர்களது உரிமை. அதனை மறுக்கும் 31 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்பிரிவு 22ஏ-வின்படி அனைத்து கடை கள் மற்றும் நிறுவனங்களில், பணியிடை நேரத்தில் பணியா ளர்கள் அமர்வதற்கு நிறுவன வளாகத்தில் இருக்கை வசதி கள் ஏற்படுத்தி தர தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் நின்று கொண்டே பணி புரியும் பணியா ளர்கள் பணி இல்லாத நேரத்தில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என புகார்  எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2, 3ஆம் தேதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் 31 கடை கள் மற்றும் நிறுவனங்கள் இருக்கை வசதி செய்து தரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

தருமபுரி, டிச.6- அரசுப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தின் சார்பில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ஏ.இளவரசி, உதவி ஆய்வாளர் எம்.தனம் மாள் ஆகியோர் கலந்து கொண்டு, பெண் குழந்தைகள் பாலி யல் சீண்டல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம் வயதில் திரும ணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைதளங் களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு

சேலம், டிச.6- சேலம் நான்கு ரோடு அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் நான்கு ரோடு, டிவிஎஸ் சுடுகாடு, கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சந்து கடையை அகற்றக்கோரியும், புதிதாக மதுபானக்கடை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, பொதுமக்கள் போலீசாரை சிறை பிடித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பணம் பறிமுதல்

கோவை, டிச.6- போக்குவரத்துச் சோத னைச் சாவடியில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மற்றும் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்து தினமும் ஏரா ளமான வாகனங்கள் கோவை கே.ஜி.சாவடி வழியாக கேர ளம் செல்கிறது. இந்நிலை யில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வெள்ளியன்று திடீ ரென கே.ஜி.சாவடி போக்கு வரத்துச் சோதனைச்சாவ டியில் சோதனையிட்டனர். இதில் மோட்டார் வாகன ஆய் வாளர் குமார் என்பவரிடமி ருந்து 4 கவர்களில் ரூ.3.21 லட்சம், அலுவலக உதவியா ளரிடம் இருந்து ரூ.38 ஆயி ரம் மற்றும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத  ரூ.3,500 என மொத்தம் ரூ.3.62 லட்சத்தை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.