districts

img

சாதனைகள் ஒண்ணுமில்லை: கச்சத்தீவு பேச்சு தேர்தல் நாடகமே!

சேலம், ஏப்.2- பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால  ஆட்சியில் செய்த சாதனைகளை  சொல்ல ஒண்ணுமில்லை என்பதால்,  பிரதமர் மோடியின் கச்சத்தீவு பேச்சு தேர்த லுக்கான நாடகமே என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் செந்தில் பதிலடி  கொடுத்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் டாக்டர்  செந்தில் சேலத்தில் செய்தியாளர்களி டம் பேசுகையில், பிரதமர் மோடி கடந்த  10 ஆண்டுகளாக தாங்கள் செய்த ஆட்சி யின் சாதனைகளையும், திட்டங்களை யும் மக்களுக்கு வெளிப்படுத்தாமல், கச்சத்தீவை முன்வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது. அப் போதைய பிரதமர் இந்திரா காந்தி, ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியான 285 ஏக்கர் பரப் பளவு கொண்ட கச்சத்தீவை இலங் கைக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுத்துவிட்டு, அதற்கு பதில் 25 லட் சம் ஏக்கர் நிலத்தை இந்தியா எடுத்துக்  கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  நாட்டின் நலனை பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களை உரு வாக்குவதிலும் காங்கிரஸ் அரசு செயல் பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10  ஆண்டுகால ஆட்சியில் நரேந்திர மோடி  மக்களுக்காக எதையும் செய்ய வில்லை. அதை சொல்லவும் அவர்க ளுக்கு மனமில்லை. கச்சத்தீவை பொருத்தமட்டில் ஒப்பந்தத்தின் அடிப்ப டையிலேயே பரிமாறிக் கொள்ளப் பட்டது. தற்போது தேர்தல் சமயம் என்ப தால் மக்களை திசை திருப்ப இது போன்ற நடவடிக்கையில் பாஜக ஈடுபடு கிறது. அருணாசலபிரதேசத்தில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி இதுவரை மௌனமாக உள்ளார். இந்த  பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்து விடு மோ? என்ற அச்சத்தில் தற்போது கச்சத் தீவு பிரச்சனையை அவர் எடுத்தது, தேர் தலுக்காக போடப்பட்ட நாடகம். காங்கி ரஸ் ஆட்சிக்காலத்தில் தான் 176 பொதுத் துறை நிறுவனங்கள் 60 ஆண்டு களாக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய பாரத பிரதமர் பொதுத் துறை நிறுவனங்களை நிர்மூல மாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கிறார். பொதுமக்களும், ஜனநாயகவா திகளும் பிரதமரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந் தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.