districts

img

கல்வி சார்ந்த மாநில அரசின் உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசு அபகரிக்கிறது

கோவை, அக். 29 –  ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கை களை புறக்கணித்து மாநிலத்திற்கென கல்வி  கொள்கை உருவாக்க வேண்டும் எனவும், ஒன்றிய அரசு மாநிலத்தின் கல்வி சார்ந்த உரி மைகள் அனைத்தையும் பறிப்பதாக கோவை யில் நடைபெற்ற மாநில கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோர் அழுத்தமான கருத்தை முன்வைத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல பழைய கட்டிடத்தில் சனியன்று மாநில கல்வி கொள்கை தொடர்பாக மண்டல அளவிலான  கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் நீதியரசர் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டகுழுத் தலைவர்  டி.ருகேசன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் செயலர் எ.கருப்பசாமி, உறுப்பினர்கள்  அருணா, ஜவஹர் நேசன், ராமானுஜம், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரா யணன் ஆகியோர் இக்குழுவில் பங்கேற்ற னர்.  இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர் கள், மாணவர் சங்கத்தினர், மாணவர் நல  பெற்றோர் அமைப்பினர், தபெதிக உள்ளிட்ட  பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங் கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.   இதில், இந்திய மாணவர் சங்கத்தின் கோவை அரசு கலைக்கல்லூரி கிளை செய லாளர் ரமேஷ் பேசுகையில், 

கல்வி நிலையங்களில் மதிப்பெண் அடிப் படையில் மாணவர்களை திறனை மதிப்பிடக் கூடாது. கல்விக்கு கொடுக்கும் முக்கியத்து வத்தைப்போலவே விளையாட்டிற்கும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகளை உரு வாக்க வேண்டும். தமிழக அரசின் நிதிநிலை  அறிக்கையில் கல்விக்கு 30 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 25 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவர் களின் தனித்திறனை கண்டறிந்து மேம்படுத்து கிற வகையில் கல்வி நிலையங்களில் தனி யான குழு அமைத்து பயிற்சி அளிக்க வேண் டும். மாணவர்களுக்கு அரசியல் மற்றும் பாலியல் சமத்துவம், சட்டம் சார்ந்த அறிமுகம் ஆகிய பாடப்பிரிவுகளை துவக்க வேண்டும். ஆசிரியர்கள் முழு நேரமும் கல்வி போதிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். கணக்கெடுப்பு, வாக்காளர் சேர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. இதுபோன்ற பணிகளுக்கு அலுவலர்களை நியமிக்க வேண்டும். பல அரசு பள்ளிகளின் கட்டி டங்கள் பாழடைந்து உள்ளது. இந்த கட்டிடங் களை சீரமைக்க வேண்டும். இதுபோல அரசு பள்ளிகளை அதிகபடுத்த வேண்டும்.  பாரதியார் பல்கலை கழகம், அண்ணா மலை பல்கழைகழகத்தின் கீழ் பல்வேறு உறுப்புக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு பேராசிரியர்களே பகுதி நேரமாக கண்காணிக்கின்றனர். முழு நேர முதல்வர்கள் நியமிக்க வேண்டும். பழங் குடியின மாணவர்களுக்கான கல்வியை உறுதிப்படுத்த அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே கல்வி நிலையங்கள் துவக்கப்பட வேண்டும். நமது கல்வி முறை முற்றிலும் கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம் செய்வதற்கான கல்வி முறையாக இருக்கி றது. இதனை, அறிவுப்பூர்வமான, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கல்வி யின் தரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த னர்.

இதேபோன்று மாணவர் நல பெற்றோர் அமைப்பு, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை,  புரட்சிகர மாணவர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து அளித்த மனுவில், தேசியக் கல்விக் கொள்கை 2020 அரசுப் பள்ளி, கல்லூரி கட்டமைப்பை சிதைக்கிறது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களை முற்றிலுமாக நிராகரிக்கிறது. 3. பள்ளிக் கட்டமைப்பை 5 + 3 + 3 + 4 என்று மாற்று கிறது. குழந்தைப் பருவத்தில் கூடுதல் மொழிகளை கற்கக் கட்டாயப் படுத்து கிறது. உயர் கல்வியில் (எந்த பட்டப்படிப்பிற் கும்) சேர அகில இந்திய அளவில் தகுதித்  தேர்வைக் கட்டாயப்படுத்துகிறது. மூன் றாண்டு பட்டப் படிப்புகளை நான்கு ஆண்டு கள் பட்டப் படிப்புகளாக மாற்றுகிறது.‌ அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெற்று, வேலைத் திறனும் பெற்றாலே அடுத்த ஆண்டிற்கு செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்குகிறது.‌ கல்வி சார்ந்த மாநில அரசின் அனைத்து உரிமைகளும் ஒன்றிய அரசு அபகரிக்கிறது. ஒன்றிய அரசின் அறி விப்புகளை நடைமுறைப்படுத்தும் முகவர் நிலைக்கு தரம் தாழ்த்தப்படுகிறது.

இத்த கைய பாதகமான தேசியக் கல்விக் கொள்கை  2020 நிராகரித்து, இதற்கு மாற்றாக மாநிலக்  கல்விக் கொள்கை வகுக்கப்பட  வேண்டும்.‌ எத்தகைய சவாலை எதிர் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்பது குறித்து இந்த குழு தனக் குள்ளேயே விவாதித்துள்ளதா? குழு ஒரு வரைவு தயார் செய்து அதை மக்கள் முன்  வைத்து தேசியக் கல்விக் கொள்கை 2020க்கு மாற்றாக நாம் முன் வைக்கும் கொள்கை என்ன என்பதை விவாதத்திற்கு உட் படுத்தினால்தானே மாநிலக் கல்விக் கொள்கை உருவாக வழி வகுக்கும் என வலியுறுத்தினர்.  மேலும், பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் தேசியக் கல்விக் கொள்கை 2020ன் பல  பாதகமான அம்சங்கள் ஏற்கனவே படிப்படி யாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவ னங்களில்  மாநில அரசின் பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை நடை முறைப் படுத்திவருகிறது. அவற்றை இந்த குழு கவனத்தில் எடுத்து உள்ளதா?. மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க கல்வியியல் செயல்பாட்டாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசிக்க இந்த குழு திட்டம் வைத் துள்ளதா? என்றும், மொழிக் கொள்கை, பள்ளிக் கல்வி முறை, உயர் கல்வி கட்ட மைப்பு தற்போது சமூகநீதியின் அடிப்படை யில் அமைந்துள்ளது.  அத்தகைய கட்ட மைப்பை சிதைக்க அனுமதிக்கக்கூடாது. இந்தியா விடுதலை அடைந்தது 75 ஆண்டு களில் கல்வித் துறையில் நாம் அடைந்துள்ள  முன்னேற்றத்தை அடுத்த நிலைக்கு கொண்டு  செல்லும் வகையில் நமது மாநிலக் கல்விக்  கொள்கை அமைய வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.