districts

img

கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுக

சேலம் ஜூலை 2 - சேகோ ஸ்டார்ச் மெர்சண்ட்ஸ் நிர் வாகம் குடோன் சுமைப் பணி தொழி லாளர்களின் கூலி உயர்வு கோரிக் கையை உடனே நிறைவேற்ற வலியு றுத்தி சிஐடியுவினர் செவ்வாயன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரை சுற்றியுள்ள சேகோ ஸ்டார் குடோன்களில் 300-க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி செய்து வரு கிறார்கள். இவர்களுக்கான கூலி  சம்பந்தமாக கடந்த முறை 20.9.2021-  இல் கூலி ஒப்பந்தம் 30 மாதங்களுக்கு  போடப்பட்டது. அந்த ஒப்பந்த காலம்  முடிந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் புதிய கூலி உயர்வு வழங் காமல் மெர்ச்சண்ட்ஸ் அசோசியே சன் நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது.  அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கூலி உயர்வு வழங்கா மல் இழுத்தடிப்பு செய்வதை  நிர்வா கம் கைவிட்டு உடனடியாக தொழிற் சங்கங்களோடு பேசித் தீர்வு காண  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் பி.ஆறுமு கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு சுமைப்பணி  சம்மேளனத் தலைவர் ஆர்.வெங்கட பதி, சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஏ.கோவிந்தன் மற்றும் நிர்வாகி கள் எம்.தண்டபாணி, பி.பாலகிருஷ் ணன், வி.ஈஸ்வரன், டி.கோவிந்தராஜ்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.