நாமக்கல், ஜன.25- ஒரு ரூபாய்க்கு பொருளை வாங்கினாலும், உரிமை மீறப்படும் போது நீதிமன்றத்தை அணுக வேண்டும், என நாமக்கல் நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ் அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி யில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து பாது காப்புக்கான சட்டங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. சட்டக்கல்லூரி முதல்வர் டி.ஆர்.அருண் தலைமை வகித்தார். கருத்தரங்கத்தை நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம்ராஜ் தொடங்கி வைத்து பேசுகையில், இந்திய தேர் தல் ஆணையத்தின் நிறுவன நாளைக் குறிக்கும் ஜன.25 ஆம் தேதியை “தேசிய வாக்காளர் தின மாக” அனுசரிக்க மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முடிவு செய்தது. கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளதைப் போல, ‘வாக்காளரியல்’ என்ற கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும். வாக்காளரியல் (voter ology) என்ற வார்த்தை அகராதி யில் கூட இல்லாத நிலைமை உள் ளது. இந்த வார்த்தையை முதன் முதலாக 1999 ஆம் ஆண்டு தமிழ கத்தில் பிரபலமாக உள்ள நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் நான் பயன்படுத்த தொடங்கினேன். தேர் தல் குறித்த வழக்கு ஆறு மாதங்க ளுக்குள் முடிக்க தேர்தல் தீர்ப்பா யங்களை அமைக்க வேண்டும் என்று கடந்த 2005 ஆகஸ்ட் மாதத் தில் வெளியான மத்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்தத்த ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை தற் போது வரை சட்டமாக்கப்பட வில்லை. ஒரு ரூபாய்க்கு பொருளை வாங்கினால் கூட உரிமை மீறப்ப டும் போது, வழக்கமான நீதிமன்றங் கள் அல்லாமல் சிறப்பு அமைப் பான நுகர்வோர் ஆணையங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்ய சட் டம் இயற்றப்பட்டுள்ளது. பணத்தை விட விலைமதிப்பற்ற தமது வாக்கை செலுத்தி ஆட்சியாளர் களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர் களை தவறாக வழி நடத்தும் விளம் பரங்கள், நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை கள், இருண்ட வடிவ தாக்குதல்கள், சேவையில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது தீர்வு காண அணுகுவதற்கு வழக்கமான நீதிமன்றங்கள் அல்லாமல் சிறப்பு அமைப்புகள் இதுவரை ஏற்படுத் தப்படவில்லை. வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மக் களாட்சியின் மீது நடக்கும் தாக்கு தல்களை விசாரிக்கவும், தேசிய வாக்காளர் உரிமைகள் பாது காப்பு கமிசனும், மாநிலங்களில் மாநில தேசிய வாக்காளர் உரி மைகள் பாதுகாப்பு கமிசன்களும் அமைக்க உடனடியாக அமைக் கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும், என்றார். இதையடுத்து ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தனிநபர்களின் மின்னணு தரவு பாதுகாப்பு சட் டம் பற்றி பேராசிரியர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், செயற்கை நுண்ண றிவு காரணமாக ஏற்பட்டுள்ள மாற் றங்கள் மற்றும் குற்றவியல் நீதி மன்றங்களில் அதன் தாக்கம் குறித்து பேராசிரியர் தீபா மாணிக் கம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். முடிவில், பேராசிரியர் சி. சுமதி சுவர்ணலட்சுமி நன்றி கூறினார்.