கோவை, ஜன.27- குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில், தேசியக் கொடியை பறக்கவிட்டு, அரசியல மைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்கிற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை எஸ்.எஸ்.குளம் சிபிஎம் கிழக்கு இடைக் குழு சார் பில் ஞாயிறன்று குடியரசு தின விழா நேரு நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு இடைக்குழு செயலா ளர் எஸ்.வெள்ளியங்கிரி தலைமை ஏற்றார். பி.கிருஷ்ணசாமி வரவேற் றார். முன்னாள் மாமன்ற உறுப்பி னர் ரகுபதி, தேசிய கொடியை பறக்கவிட்டார். இதில், அரசியல மைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடை பெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட குழு உறுப்பி னர்கள் மகேஷ்வரன், கோபால்சங் கர் மற்றும் மூத்த தோழர் பி.ராஜ கோபால், இடைக் குழு உறுப்பினர் கள் எஸ்.பாரதி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். இதேபோன்று, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் கோவை மேற்கு நகரக் குழு சார்பாக குடியரசு தினத் தன்று இந்திய அரசியலமைப்பு முகப்புரையை வாசித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ் விற்கு கிளைத் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, கிளை நிர்வாகிகள் கிருபாகரன் ரத்தீஷ், சூர்யா ஆகியோர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிக வில், தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு மாவட்டச் செயலா ளர் எஸ் ஆதிக் பாஷா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.ஆர். முரு கேசன், ஆகியோர் சிறப்புரையாற் றினர். இந்நிகழ்வில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், டிஎஸ்.சலீம் நன்றி கூறினார். விளையாட்டு விழா மக்கள் ஒற்றுமையை வலியு றுத்தி கோவை உப்பிலிபாளையத் தில் வாலிபர் சங்கத்தினர் பொங்கல் மற்றும் குடியரசு தின விளையாட்டு விழா நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உப்பிலிபாளையம் கிளை சார்பில் மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி பொங்கல் மற்றும் குடிய ரசு தின விளையாட்டு விழா ஞாயி றன்று உப்பிலிபாளையம் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இதில், வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ். பாரதி வாலிபர் சங்க கொடி ஏற்றி வைத்தார். குப்பு சாமி நினைவு கைப்பந்து குழு நிர் வாகி தம்பு என்ற நாராயணசாமி தேசிய கொடியை பறக்கவிட்டார்.இதில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. இந்நிகழ்வில், வாலிபர் சங்க பொறுப்பாளர் ஆர்.மூர்த்தி, மாவட் டக் குழு உறுப்பினர் கெயில் மேரி, மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பி னர் ரம்யா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம். விவேகானந் தன், முன்னாள் நகர் குழு உறுப்பி னர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல் வன், சிங்கை நகரச் செயலாளர் எம். மணி பாரதி, பொருளாளர் எம்.தியாகு ஆகியோர் வாழ்த்தி பேசி னார். மாலையில் நடைபெற்ற பரிச ளிப்பு விழாவில் அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் வி. சுரேஷ், மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் சி.ஜோதிமணி, ஸ்ரீ தாய் செக்யூரிட்டி ஏஜென்சி எஸ். ரமேஷ் குமார், ஸ்ரீ லட்சுமி பர்னிச்சர் சி. ஆறுச்சாமி உள்ளிட்டோர் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். முடி வில், லட்சுமணன் நன்றி கூறினார். இதேபோன்று, கோவை வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தேசிய கொடியை பறக்கவிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 142 அரசு ஊழியர்கள் மற்றும் 45 மாநகர போலீசாருக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மேலும், 61 மாநகர போலீஸ், 34 மாவட்ட போலீ சாருக்கான தமிழ்நாடு முதல்வர் பதங்களை ஆட்சியர் வழங்கி கௌரவித்தார். ஈரோடு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் நடைபெற்ற குடிய ரசு தின விழாவிற்கு, மாவட்ட உதவி தலைவர் டி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ப.காசி விசுவ நாதன் வரவேற்றார். பவானிசாகர் பேரூராட்சி மன்றத்தின் தலைவர் டி.ஏ.மோகன் தேசியக் கொடியை பறக்கவிட்டார். அமைப்பின் மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து அரசியல் சாசன முகவுரையை வாசிக்க, அனைவரும் அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மக்கள் ஒற்றுமை மேடையின் மாநிலக் குழு உறுப்பினர் கே.துரைராஜ், சிறு பான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலக் குழு உறுப்பினர் அந்தி யூர் ஏ.ஹாத்திம்தாய், வணிகர் சங் கத் தலைவர் பி.எஸ்.நாகம்மை யன், முத்தவல்லி எஸ்.எம்.பஷீர் அகமது, மாற்றுத்திறனாளிகள் சங் கத்தின் மாவட்ட உதவித் தலைவர் ஆர்.ரமேஷ், பேரூராட்சி துணைத் தலைவர் பி.வைகுந்தன், மலை வாழ் மக்கள் சங்கத் தலைவர் சி. துரைசாமி, மாவட்டப் பொருளாளர் கே. நடராஜன், முன்னாள் முத்த வல்லி ஏ.எம்.ஹபீபுல்லாஹ், பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முடிவில், மாவட்டக் குழு உறுப் பினர் ஏ.பி.ராஜு நன்றி கூறினார். இதேபோன்று, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா 46புதூர், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் தேசிய கொடியை பறக்க விட்டு, மரியாதை செலுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவ லர் சு.சாந்தகுமார், காவல் கண் காணிப்பாளர் ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.