ஈரோடு, டிச. 12- புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகளை அகற்றியது தொடர்பாக தொடர் போராட் டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், நக ராட்சி நிர்வாகம் கோரிக்கை ஏற்றதால் திங்க ளன்று நடைபெற இருந்த தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் உண்ணா விரதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் இயங்கி வந்த மாட்டு இறைச்சி விற்பனை கூடங்களை முன் னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. நகராட்சி நிர்வா கத்தின் இந்நடவடிக்கையைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடப்பட்டது. இந்நிலையில், கடந்த சனி யன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமூ கத் தீர்வு ஏற்பட்டது. மூன்று மாத காலத் திற்குள் கட்டிடம் கட்டி மாட்டிறைச்சி கடை களுக்கு ஒதுக்கித்தரப்படும் என உத்தர வாதம் அளித்தனர். இதனால் போராட்டம் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி மக்கள் போராட் டத்திற்கு திரண்டனர். இதனையடுத்து, நடை பெற்ற பேச்சுவார்த்தை குறித்தும், நகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறுகிற கூட்டமாக மாற்றப்பட்டது. இதில், பவானி சாகர் சிபிஎம் ஒன்றிய செயலா ளர் டி.சுப்பிரமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, ததீஒமு ஒன்றிய தலைவர் எ.பி.ராஜு, செயலாளர் பி.ஜெகநா தன், கிளை செயலாளர் பி.என்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஏராள மானோர் பங்கேற்றனர்.