திருப்பூர், மார்ச் 18 - நாடாளுமன்ற நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்க ளன்று நடத்தப்படும் மனுநீதி நாள் ரத்து செய்யப்பட்டுள் ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோரிக்கை மனுக்களுடன் வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட் சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மனுக் கள் பெட்டியில் தாங்கள் கொண்டுவரும் மனுக்களை போட லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.