பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பட்டியலின மக்களுக்காக அமைக்கப்பட்ட தொழிற்கூடங்களை பயன் பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செவ்வா யன்று (இன்று) ஆர்ப்பாட்டம் பெருந்துறையில் நடைபெறுகிறது. இப்போராட்டத்தினை விளக்கி கரு மாண்டிசெல்லிபாளையம் பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், முன் னணியின் மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, சி.பரமசிவம், விச கே.குப்புசாமி, விதொச சி.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.