districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றிடுக பொள்ளாச்சி எம்.பி.,க்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம்

உடுமலை, ஆக.4- சாதி ஆணவப்படுகொலை களை தடுக்க சிறப்புச்சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்தில் குரல்  எழுப்ப வேண்டும் எனக்கோரி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினருக்கு தீண்டாமை ஒழிப்பு முன் னணி கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டப் பொருளாளர் அ.பஞ்ச லிங்கம், பொள்ளாச்சி நாடாளு மன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரமூர்த் திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தின் ஜூங் ஜூனோ மாவட்டத் தில் உயர் சாதியினர் கடைகளில் பொருட்கள் வாங்க மறுத்ததற்காக பட்டியலிதை சேர்ந்த ஒருவர் கொலை மற்றும் அதே மாவட் டத்தில் பழங்குடியின சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத் தப்பட்டு எரித்து கொலை செய்யப் பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஜூன் இறுதி வரை 7 முஸ்லிம்கள்  கும்பல் படுகொலை குற்றவாளிகள்  நடவடிக்கையின்றி சுதந்திரமாக வலம் வருதல், மத்திய பிரதேசத் தில்  பட்டியலிதை சேர்ந்த  ஒருவர்  கடுமையாக தாக்கப்பட்டு நிர்வாண மாக இழுத்து வரப்பட்ட நிகழ்ச்சி  நாடு முழுவதும் பேசுபொருளா னது. உத்தரப்பிரதேசத்திலும், மத் திய பிரதேசத்திலும் மிகச்சாதாரண மான காரணங்களைக்கூறி சிறு பான்மையினரின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படுதல், தெலுங்கானா மாநிலத்தில் ஒரு  பழங்குடியின பெண்மணியும், அவ ரது குடும்பமும் கடும் சித்திரவ தைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், அந்நிகழ்வில் பெண்மணி பாலியல்  வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள் ளார். இவையெல்லாம் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. மாறாக தேர்தல்  பிரச்சாரத்தில் ஆளும் கட்சியால் நிகழ்த்தப்பட்ட வெறுப்பு அரசியல்,  மக்களை பிரிக்கும் பிரச்சாரத்தின் விளைவுகளே ஆகும். இத்தகைய கொடுமைகள் நிக ழாத வண்ணம் தடுக்கவும், குற்றவா ளிகளை தாமதமின்றி தண்டிப்பதற் கான சட்ட நடவடிக்கைகளை விரை வுப்படுத்த நாடாளுமன்றத்தில் உறு தியான தலையீடு வேண்டும். எங் கெல்லாம் பட்டியலின மக்கள்  பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கே எல்லாம் முறையாக வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ்  உறுதிமிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதையும் உறுதி செய்ய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். கல்வியிலும், வேலை வாய்ப்பு களிலும் நடைமுறையில் உள்ள  இட ஒதுக்கீட்டு முறைமையில் அரங் கேறும் மீறல்களுக்கு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும். தனியார் துறை யிலும் இட ஒதுக்கீடு முறைமை கொண்டுவரப்பட வேண்டும். ஒன் றிய அரசால் பறிக்கப்பட்டுள்ள எஸ்சி/எஸ்டி மற்றும் ஒடுக்கப்பட்ட  பிரிவினர்களின் கல்வி உதவித் தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைமைகள் விளிம்பு நிலை மாணவர்களின் நலனுக்கு விரோதமாக இருப்பதால், அகில  இந்திய அளவிலான நீட் தேர்வு  முறைமை முழுமையாக கைவிடப் பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பை, விரிவான சாதி வாரி கணக்கெடுப்போடு இணைத்து விரைவாக நடத்த  வேண்டும். தொடர்ந்து சிதைக்கப் பட்டு வரும் பட்டியலின, பழங்குடிக ளுக்கான துணைத் திட்டங்களை முறையாக கண்காணிக்கவும், அம லாக்குவதற்குமான தேசிய அளவி லான சட்டத்தை நிறைவேற்ற வேண் டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக் கீட்டின் மீதுள்ள 50 சதவிகித உச் சவரம்பை நீக்கி, கூடுதல் இட ஒதுக் கீடுகளை அத்தகைய பிரிவின ருக்கு வழங்க வழிவகை செய்யும்  அரசியல் சாசன திருத்தம் கொண்டு  வரப்பட வேண்டும். எல்லா அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி நிலுவை  காலியிடங்களை நிரப்புவதற்கான கால அட்டவணை அறிவிக்கப் பட்டு, உரிய காலத்திற்குள் நியம னங்கள் மேற்கொள்ளப்பட வேண் டும். நாடாளுமன்றத்தில் விவாங் கள் எதுவுமின்றி ஜனநாயகத்திற்கு புறம்பாக நிறைவேற்றப்பட்ட கிரி மினல் சட்ட திருத்தங்களை கைவிட  வேண்டும். மிக முக்கியமானதாக,  பட்டியலின, பழங்குடி மக்களுக்கு  எதிரான வன்முறைகள் தடுத்து  நிறுத்தப்பட வேண்டும். சாதிய பாகு பாடுகள் களையப்படுவதற்கான  முயற்சிகள் முன்னெடுக்கப்பட  வேண்டும். சாதி ஆணவக் கொலை களை தடுப்பதற்கான சிறப்பு  சட்டம் ஒன்றிய அரசாலும், மாநில  அரசுகளாலும் நிறைவேற்ற குரல்  எழுப்ப வேண்டும்.இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.89 ஆயிரம் இழப்பீடு

தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.89 ஆயிரம் இழப்பீடு கோவை, ஆக.4- சூலூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில், தரையி றங்கும் விமானங்களுக்கு இடையூறாக உள்ள தென்னை  மரங்களை வெட்ட, விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.89  ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், சூலூர், காங்கேயம்பாளையம் பகுதி யில் உள்ள விமானப்படை தளத்தைச் சுற்றி பல விவசாய  நிலங்கள் உள்ளன. இங்குள்ள தென்னை மரங்கள் விமானங்க ளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், விமானப் படை அதிகாரிகள் தமிழக அரசிடம் இதுகுறித்து புகார் செய்தி ருந்தனர். இதையடுத்து காடம்பாடி கிராமத்தில் உள்ள கோரத் தோட்டம் பகுதியில் 10 தென்னை மரங்கள் வெட்டப்பட முடிவு  செய்யப்பட்டது. ஆனால், மரங்களை வெட்ட இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த னர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு மரத்திற்கு ரூ.89 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவால் விமான நிலையம் பாதுகாப்பாக இயங்கும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்ப டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அஞ்சலி

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அஞ்சலி உதகை, ஆக.4- வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு, மஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத் தப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30  ஆம் தேதியன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத் தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது  வரை மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மஞ்சூரில் ஞாயிறன்று நடைபெற்றது. அதில்,  அனைத்து வியாபாரிகள் சங்கம், ஓட்டுநர் உரிமையாளர் கள் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பு கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு பொள்ளாச்சி, ஆக.4- பொள்ளாச்சியில் பள்ளிவாசல் மற்றும் பொதுமக்கள் பங் களிப்புடன் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரளம் மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம்  தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், வீடு மற்றும் உடைமை களை இழந்து தவிக்கும் மக்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பொள் ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள அர்ரஹ்மத் சுன்னத் ஜமா  அத் ஷாபியா மஸ்ஜித் பள்ளிவாசல் சார்பில், பொதுமக்கள் பங்களிப்புடன் நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டது. ரூ.15  லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், பெட் ஷீட், பால் பவுடர், பிஸ்கட் மற்றும் மருத்துவ உபகர ணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இரண்டு லாரிகள் மூலம் ஞாயி றன்று அனுப்பி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் சாதி, மத, பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களிட மிருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள் ளனர்.

காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம்

காட்டுயானை தாக்கி விவசாயி படுகாயம் தருமபுரி, ஆக.4- ஏரியூர் அருகே காட்டுயானை தாக்கி விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள தொன்ன குட்டஹள்ளி, குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் செல்வகுமார். இவர் அவருடைய விவ சாய நிலத்தில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், அடிக்கடி ஒற்றை  யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல், சனி யன்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்ப டுத்தி விட்டு விவசாயி தூங்கி கொண்டிருந்த போது விவ சாயியை தாக்கியுள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் இத னைக்கண்டு சத்த மிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து அங்கி ருந்து யானையை விரட்டி அடித்தனர். இதன்பின் காயம டைந்த விவசாயியை ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு  ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக வனத்துறை யினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தபால் நிலைத்தில் ஆதார் சேவை!

தபால் நிலைத்தில் ஆதார் சேவை! சேலம், ஆக.4- சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் துறையின் சார்பில் 42  ஆதார் சேவை மையங்கள் செயல்படுகிறதென தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடபர்காக சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ் சல் கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் கிழக்கு கோட்டம் அஞ்சல் துறை யின் கீழ் 42 ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. குறிப்பாக சேலம் தலைமை அஞ்சலகம் மற்றும்  அஸ்தம்பட்டி துணை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஆத்தூர், ஏற்காடு, அயோத்தியப்பட்டினம், அம்மாபேட்டை, வாழப்பாடி, சேலம் தெற்கு, தலைவாசல், பேர்லாண்ட்ஸ் அழ காபுரம், செவ்வாய்ப்பேட்டை, பேளூர், காமராஜர் நகர் காலனி, காரிப்பட்டி, கெங்கவள்ளி, சுக்கம்பட்டி, ஆட்டையாம் பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர், ஒண்டிக்கடை, வீர பாண்டி, மல்லியக்கரை, நரசிங்கபுரம், வடசென்னிமலை, பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர் மற்றும் ஏத்தாப்பூர் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் அலுவ லக நேரங்களில். ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆதார் பெறுவதற்கும், 5 - 7 வயது மற்றும் 15-17  குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் சேவை பெறுவ தற்கும், கட்டணம் ஏதும் இல்லை. பெயர் திருத்தம், முக வரி திருத்தம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற மற்ற  சேவைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 ஆதார் கட்டணமாக வசூ லிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுடடைய ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள தங்களுடைய அசல் ஆவணங் களை கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

செப்.20 முதல் 30 வரை உடுமலையில் புத்தகத் திருவிழா

உடுமலை, ஆக.4- செப்.20 முதல் 30 ஆம் தேதி வரை உடுமலையில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை புத்தகாலயம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைத்து, தொடர்ச்சியாக உடுமலை நகரில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தி வருகின்றன. இந்நிலையில், 10 ஆவது புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம் வியாழனன்று தேஜஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆசிரியர் ஹென்றி டேனியல் தலைமை வகித்தார். புத்தகத் திருவிழாவிற்கான நோக்கத்தை விளக்கி பாலசுப்பிரமணியம், மலர்  ஸ்டீபன், ஓய்வுபெற்ற காவல் துறை துணை கண்காணிப்பளார் கந்தசாமி, பொறியாளர் நீலகண் டன், எல்ஐசி திருநாவுக்கரசு, வின்ட்கேர் நிர்வாக இயக்குநர் அந்தோணிராஜ், வழக்கறிஞர் சாதிக்பாஷா அகியோர் பேசினர். இக்கூட்டத்தில், செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு தலைவராக நாகராஜ், செயலாளராக சக்திவேல், பொருளாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், புத்தக அரங்கம், விளம்பரம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த தனிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்  சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு சேலம், ஆக.4- திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்ப டுள்ளதென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06030) தொடர்ந்து செப்.29 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மறுமார்க்க மாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை தோறும் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06029) தொடர்ந்து செப்.30 ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.