தென்னிந்தியாவின் மான்செஸ் டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ் டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவிகித தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவிகித தொழிற் சாலைகள் நகர்புறங்களிலும் செயல் பட்டு வருகின்றன. இதில் கிராமப்புறங் களைச் சுற்றி சுமார் 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சி பகுதி களை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறு வனங்களும் உள்ளன. இத்தொழில் நிறு வனங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். கோவையில் சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களது தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்திற் கும் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்பு செட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப் படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங் களுக்கு தேவையான பொருட்களை தயா ரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள். இதேபோல, கோவை ராஜா வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசி யாள் வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா நகர், செல்வ புரம், சலீவன் வீதி, காந்திபார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகளும், நகை தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணி யாற்றி வருகின்றனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் ஜவுளி தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் பிற மாவட்ட, மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதுதவிர ஐடி நிறு வனங்கள், கட்டுமான நிறுவனங்கள், இதர அலுவலகங்கள் என பல ஆயிரக்கணக் கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இந்நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். கோவையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வர்களும், தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று விட்டனர். கட்டுமானம், ரயில்வே பொருட் கள் உற்பத்தி, இரும்பு நிறுவனங்கள், காஸ் டிங் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலை யங்களில் குவிந்தனர். சில தொழில் நிறு வனங்கள் வடமாநில தொழிலாளர்களுக் காக டிராவல்ஸ் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பியது.
கோவை ரயில் நிலையத்திலிருந்து மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளி மாவட்டங்களுக்கும், வட மாநிலங் களுக்கும் சென்றிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் தொழில் நிறுவனங் கள் தொழிலாளர்கள் சென்றதால் ஒரு வாரம் வரை உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில் விசைத்தறி, டெக்ஸ்டைல், ஆட்டோ மொபைல், பம்பு, கிரைண்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு மாதம் இருப்பு வைக் கும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ள னர். இதனால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. போக்கு வரத்து நெரிசல் மிக்க கோவை நகர சாலை கள் போக்குவரத்து அதிகமின்றி காணப் படுகிறது. இதுகுறித்து தொழில் துறையினர் கூறு கையில், கோவை மாவட்டத்தில் பெரும் பாலான உற்பத்தி தொழில் நிறுவனங்க ளில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்திலிருந்து வந்து தங்கி வேலை செய்கிறார்கள். இவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று விட்டனர். ஒரு வாரம் கடந்த பின்னர்தான் வருவார்கள். இவர்கள் சென்று வருவதற்கான டிக்கெட் மற்றும் பண் டிகை செலவுக்கான தொகை, போனஸ் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறோம். சிலர் பண்டிகை முடிந்த பின்னர் திரும்ப வருவதில்லை. 40 சதவிகிதத்திற்கும் மேற் பட்டோர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர் கள். அவர்களும் சொந்த ஊர் சென்றுவிட்ட னர். இவர் திரும்பி வர குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். சிலர் வந்தாலும் வேறு நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று விடு வார்கள். எனினும் புதிய தொழிலாளர்கள் தீபாவளி முடிந்து அதிகளவில் பணிக்கு வரு வார்கள் என நம்பிக்கை உள்ளது, என்ற னர்.
-கே.எஸ்.எம்.