கோபி, ஜன.27- விவசாய விளைபொருட்களை சந்தைப்ப டுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோபியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வாகனபேரணி மற்றும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர விவ சாயத்தை அழித்து விட்டு கார்ப்பரேட் கையில் விவசாயத்தை வழங்கிட 3 வேளாண் சட்டங் களை ஒன்றிய அரசு கொண்டு வந்து உள்ளது. இதனை கண்டித்து விவசாயிக ளின் ஒன்றுபட்ட தொடர் போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசு தற்போது வேளாண் பொருட்களை சந்தைபடுத்துதல் என்ற பெயரில் நாசகார திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண் டும். குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க சட் டம் இயற்ற வேண்டும். கிரேட்டர் நொய்டா வில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். பஞ்சாப் எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் தலைவர் ஜகஜித் சிங்தலே வாலின் உயிரை பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்று வரு கின்றன. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபி யில் ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் டிராக்டர் வாகன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்கேஎம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து முன்னிலை வகித்தார். டிராக்டர் வாகன பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் துளசிமணி தொடங்கி வைத்தார். சீதா கல்யாண மண்ட பத்தில் தொடங்கிய பேரணி, ஜீவாசெட், புதுப்பாளையம், பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான டிரக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தற்சார்பு விவசாயிகள் சங் கத் தலைவர் கி.வே.பொன்னையன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலாளர் கார்த்திகே யன், தாலுகா செயலாளர் க.பெருமாள், விதொச செயலாளர் ரங்கசாமி, இடைக மிட்டி உறுப்பினர் சோமசுந்திரம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா தலைவர் தன சிங் மாதர் சங்க கமிட்டி செயலாளர் மல்லிகா என திரளானோர் பங்கேற்றனர்.