உதகை, ஜூன் 19- யானைகள் வழித்தட விரிவாக்கம் குறித்து விஞ்ஞான பூர்வமான ஆய்வோ, உரிய ஆலோசனையோ மேற்கொள்ளாமல் அதிகாரிகள் கொண்ட குழுவின் அறிவிப்பை நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் மற்றும் எருமாடு இடைக்குழு செய லாளர் கே.ராஜன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது, பந்தலூர், கூடலூர், மசின குடி பகுதியில் 5 யானைகள் வழித்தடம் விரிவாக்கம் செய்யும் முயற்சியை நிறுத்த வேண்டும். எந்தவிதமான விரிவான ஆய்வும் நடத்தாமல் ஒரு சில அதிகாரிகளை கொண்ட குழு இவ்வாறு புதிய யானை வழித்தடம் அறி விப்பது மக்களுக்கு பெரும் அச்சுறுத் தலாக உள்ளது. துவக்கத்தில் 500 ஏக்கர் என்று கூறிய யானை வழித்தடம் போகப் போக 10,000 ஏக்கராக உயர்த்துவதில் எந்த விஞ்ஞான தன்மையும் இல்லை. யானைகள் விவசாயிகளின் விவ சாய நிலத்திற்கு வருவது உணவுக்கும் தண்ணீருக்கும் தான் என்பது தெரிந்த விஷயமாகும். யானைகள் எண் ணிக்கை உயரும் போது, அதற்கு ஏற்ப வனத்திற்குள் யானைக்கு தேவை யான உணவு உருவாக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. நூறு நாள் திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி காட்டுக்குள் உள்ள பார்த் தீனியம் மற்றும் உண்ணி செடிகளை வேருடன் பறிக்கப்பட்டு முற்றிலும் அழித்து, மூங்கில் கன்றுகள் நட வேண் டும். மூன்று வருடத்தில் இவை பெரிய காடுகளாக மாறும்பொழுது யானைக ளுக்கு தேவையான உணவு காட்டுக் குள்ளேயே உருவாக்க முடியும். உணவு தேடி யானைகள் வெளியே வராது, புதிய யானைகள் வழித்தடமும் தேவைப்படாது. வனத்திற்குள்ளிருந்து யானைகள் வெளியே வராமல் இருக்க ட்ரஞ்சு வெட் டியும், ரயில் தண்டவாளத்தை பயன்ப டுத்தி பெரிய அளவிலான தடுப்பு வேலி கள் உருவாக்கி யானைகளை வனத்திற் குள் தடுத்து நிறுத்த முடியும். அதன் மூலம் பல ஆயிரம் தொழிலாளர்க ளுக்கு நூறு நாள் வேலை வழங்க முடி யும். அதற்கு தேவையான நிதியை தனித் தன்மையுடன் உள்ளாட்சி அமைப்பு மூலம் நிர்வகிக்க வேண்டும். வனத்துறையால் புதிதாக அறிவிக் கப்பட்ட யானைகள் வழித்தடம் முற்றி லுமாக தடுத்து நிறுத்தக்கோரி கூடலூர், பந்தலூர் தாலூகாக்களில் பேரவை கூட்டங்கள் நடத்துவது, 1 லட்சம் கையெழுத்துகளை பெற்று தமிழக முதலமைச்சருக்கு அனுப்புவது என சிபிஎம் மாவட்டக்குழுவில் தீர்மானிக் கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள் ளது. முன்னதாக, எருமாடு ஏரியா கமிட்டி பேரவை கூட்டம் மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் தலைமையில் நடை பெற்றது. இடைக்கமிட்டி செயலாளர் கே. ராஜன் வரவேற்றார். இதில், அகில இந் திய விவசாய சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் டாக்டர் பிஜு கிருஷ் ணன் துவக்கி வைத்தார். அகில இந்திய பொருளாளர் கிருஷ்ண பிரசாத். அகில இந்திய துணைச் செயலாளர்கள் டி.ரவீந் திரன், பானோலி வல்சன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.யோகண்ணான், மாவட்டத் தலைவர் என்.வாசு உள்ளிட் டோர் உரையாற்றினர். முடிவில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அனீபா மாஸ்டர் நன்றி கூறினார்.