districts

img

ஊழியர்களிடம் தண்டத்தொகை வசூலிப்பதை கைவிடுக

சேலம், செப்.25- ஊழியர்களிடம் தண்டத்தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் என  வலியுறுத்தி, தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற் றும் அலுவலர்கள் ஆகியோரை பணி  நிரந்திரப்படுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும். ஊழியர்களிடம் தண்டத்தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும். சான் றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தி னர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் கோரிமேடு தொழிற் பயிற்சி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், வட்டக்கிளைச் செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மேட்டூர் தொழிற்பயிற்சி  நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் நிர்வாகி வீ.முனு சாமி தலைமை வகித்தார். இதில்,  மாநிலப் பொருளாளர் என்திருநாவுக் கரசு. நிர்வாகி மு.இளங்கோவன், அரசு ஊழியர் சங்க மேட்டூர் வட்டக்கிளைச் செயலாளர் சிங்கராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத் தலைவர் ஆர்.சுமதி தலைமை வகித்தார். செயலாளர் கே.கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்  சந்திரமௌலி, எஸ்.சங்கரன் உட்பட  பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளைப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி நன்றி கூறினார். கோவை கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு  தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தொழிற்பயிற்சி அலுவலர் சங்க கிளைத்  தலைவர் ஆர்.கோவிந்தராசன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை நிர்வாகி ஆர்.ராமசாமி கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். இதில்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.வேலுமணி,  ஆனைக்கட்டி கிளைச் செயலாளர் கார்த்திகேயன், கிளைப் பொருளாளர் என்.பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.