உதகை, அக்.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் உதகை தாலுகா செய லாளராக ஏ.நவீன்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நீலகிரி மாவட்டம், உதகை தாலுகா 11 ஆவது மாநாடு கட்சி யின் மாவட்டக் குழு அலுவல கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் என்.எல்.சுப்பிரமணி கொடியேற்றி னார். தாலுகா உறுப்பினர் ஆமினா தலைமை வகித்தார். பி.கணேசன் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கிவைத்து சிபிஎம் நீலகிரி மாவட்டச் செயலாளர் விஏ.பாஸ்கரன் உரை யாற்றினார். உதகை தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன் வேலை அறிக்கையை முன் வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சங்கரலிங்கம், சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மகளிர் உரி மைத் தொகை அனைத்து பெண் களுக்கும் கிடைக்க வேண்டும். தலைகுந்தா பகுதியில் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் - உதகை தேசிய நெடுஞ்சாலையை விரைவில் சீரமைக் கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் 11 பேர் கொண்ட உதகை தாலுகா குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் செயலாளராக ஏ.நவீன்சந்திரன் தேர்ந்தெடுக் கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆசரா நிறைவுரையாற்றினார். முடிவில், தாலுகாக் குழு உறுப்பினர் புட்டுசாமி நன்றி கூறினார்.